தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக சட்டம் இயற்ற வேண்டும் - கலி.பூங்குன்றன்
பெரியார் விருது அறிவிக்கப்பட்ட கலி.பூங்குன்றன் தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 9 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 -ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022 -ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், வரும் 16 -ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா.கு. இரணியன் பொன்னுசாமிக்கு திருவள்ளுவர் விருது, 2022 -ம் ஆண்டுக்கான அண்ணாதுரை விருது உபயதுல்லாக்கும், காமராசர் விருது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும், மகாகவி பாரதி விருது டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க.,விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது கவிஞர் மு.மேத்தாக்கும், அம்பேத்கர் விருது எஸ்.வி.,ராஜதுரைக்கு, தேவநேயப்பாவணார் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கும் வழங்கப்பட உள்ளன.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,408 கன அடியில் இருந்து 1,466 கன அடியாக அதிகரிப்பு.
பெரியார் விருது, கவிஞரும்,திராவிடர் கழக துணைத்தலைவருமான கலி.பூங்குன்றனுக்கு அறிவிக்கப்படுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு பொங்கல் விழா கொண்டுவதற்காக வருகை தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கலி.பூங்குன்றனுக்கு மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தினர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் பலர் சால்வை, மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க ஒன்றுதிரண்டிருந்த பெரியார் தொண்டர்கள், கலி.பூங்குன்றனை வாழ்த்தியும், பெரியாரை வாழ்த்தியும், முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலி.பூங்கன்றன் கூறுகையில், தை முதல்நாள் தான் தமிழ்புத்தாண்டு என்று கலைஞர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. இடையிலே அது நீக்கப்பட்டுவிட்டது, திராவிட மாடல் அரசு மீண்டும் தை ஒன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று ஆணை அல்ல சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த தமிழ்ப்புத்தாண்டில் தனது கருத்து என்றும் கூறி அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets