மேலும் அறிய

நண்பாஸ் அட்டகாசமான சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.... திருச்சி என்ஐடியில் வேலைங்க: அருமையான சம்பளம்

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

தஞ்சாவூர்: செம சூப்பர் சான்ஸ் நண்பர்களே... திருச்சி என்ஐடி-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. மொத்தம் 48 பணியிடங்கள். அப்புறம் ஏன் தாமதம். உடனே தகுதியானவர்கள் உங்க விண்ணப்பத்தை தட்டி விட்டுடுங்க. விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி என்று அறிவிச்சு இருக்காங்க. எப்படி விண்ணப்பிக்கணும் என்று கேட்குறீங்களா? இதோ முழு விவரங்கள் உங்களுக்காக.

என்ன வேலை, எத்தனை பணியிடம்

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் கணக்கு அதிகாரி, ஆலோசகர், விடுதி மேனேஜர், கணக்காளர், பொறியியல் பயிற்சியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், விடுதி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு செயல்படும் விடுதி நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த வகையில், என்னென்ன பதவிகள் வேலைவாய்ப்பு உள்ளன, கல்வித்தகுதி என்ன, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம் வாங்க.

கணக்கு அதிகாரி 1
பொறியாளர் 1
விடுதி மேனேஜர் 5
கணக்காளர் 4
பயிற்சி பொறியியல் 3
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் 4
விடுதி உதவியாளர் மேனேஜர் 27
மேட்ரான் 2
பல்நோக்கு பணியாளர் 1 என மொத்தம் 48 காலி பணியிடங்களை நிரப்பறாங்க ப்ரெண்ட்ஸ். என்னென்ன தகுதின்னு பார்ப்போம்.

என்ன தகுதிகள் தேவைன்னு பாருங்க

கணக்கு அதிகாரி பதவிக்கு பி.காம், எம்.காம், ICWA/CA ஆகியவை முடித்திருக்க வேண்டும். கணக்கு துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும். ஓய்வு பெறுபவர்கள் அல்லது ஓய்வு பெற உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 வயதிற்கு அதிகமாக 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம்.

பொறியாளர் பதவிக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் B. E. / B. Tech முடித்திருக்க வேண்டும். விடுதி மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம். 5 வருடம் அனுபவம் தேவை.

கணக்காளர் பதவிக்கு வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, 5 வருடம் அனுபவம் தேவை. பயிற்சி பொறியியல் பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் B. E / B. Tech /BCA/ MCA / MSc ஆகிய கல்வித்தகுதியுடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பு உடன் 3 ஆண்டு அனுபவம் தேவை. விடுதி உதவியாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் 1 ஆண்டு அனுபவம் தேவை. மேட்ரான் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப் பணி, பொது நிர்வாக ஆகியவற்றில் முதுகலை அல்லது ஏதெனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவம் தேவை.

பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, தட்டச்சு, கணினி பயன்பாடு, நல்ல கம்யூகேஷன் திறன், 1 ஆண்டு அனுபவம் ஆகியவை தேவை. 

எந்தெந்த பணிக்கு... எவ்வளவு சம்பளம்... 

கணக்கு அதிகாரி - ரூ.40,000, பொறியாளர் - ரூ.26,790 வழங்கப்படும். இதர பதவிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்னப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, எழுத்துத்தேர்வு/ நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், பெரும்பாலும் நேர்காணல் அடிப்படையில் அமையும். நேர்காணலுக்கு கீழ்கண்ட சான்றிதழ்கள் அவசியம்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
பட்டப்படிப்பு ஒங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
வகுப்பு பிரிவு சான்றிதழ்
அடையாள அட்டை
அனுபவ சான்றிதழ்

இப்படிதான் விண்ணப்பத்தை அனுப்பணும்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் இதற்கான உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் வழியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை https://www.nitt.edu/home/other/jobs/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். போன் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்பு வாங்கலாம். திருச்சியில் என்ஐடி விடுதி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். 

இதற்கான விண்ணப்பம் பெறும் பணி கடந்த 01.12.2025ம் தேதி தொடங்கி இருக்காங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் 13.12.2025. அதனால தாமதம் வேண்டாம். எழுத்துத் தேர்வு/ நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்காங்க. திருச்சி என்ஐடி விடுதி நிர்வாகத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் இதுபோன்ற சான்ஸ் கிடைக்காதுங்க.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget