மேலும் அறிய

ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை

மயிலாடுதுறையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தி நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தி நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக மக்களால் அம்மா என அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 -ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் 2016 டிசம்பர் மாதம் 5 -ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.


ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை

பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கம் ஆனார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் என தமிழகம் தலை நிமிர ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அதிமுகவினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினராலும் அம்மா என்று அழைக்கப்பட்டவர் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, உள்ளிட்ட கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.

Half Yearly Exam Postponed: மழை பாதிப்பால் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு?- கல்வித்துறை ஆலோசனை


ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை

இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அதிமுக, அமமுகவினர் ஜெயலலிதாவின் படங்களை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பாரதி ஏற்பாட்டில் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்தி, சந்திரமோகன், உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை

இதுபோன்று மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் அமமுக நகர செயலாளர் ராதா ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் ஏராளமான பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அமமுகவினர் மரியாதை செலுத்தி சென்ற சூழலில் அவ்வழியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு காலணியை கழட்டி விட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அவர் படத்தை தொட்டு தழுவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றார். இந்நிகழ்வு பார்த்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Ola S1 X+ Price Cut: S1 X+ மாடலின் விலையில் ரூ.20 ஆயிரத்தை குறைத்த ஓலா நிறுவனம்! புதிய நிலவரம் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget