மேலும் அறிய

புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!

புதுச்சேரியில் மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த குடோனுக்கு சீல் வைத்து ரூ. 30 கோடி மாத்திரைகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த குடோனுக்கு சீல் வைத்து ரூ. 30 கோடி மாத்திரைகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 

மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடல் 

புதுச்சேரியில் போலி மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு போலி மாத்திரை தொழிற்சாலை பூர்ணாங்குப்பம் மற்றும் இடையார் பாளையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில், இடையார் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சீல் வைக்கப்பட்டு, சுமார் ரூ. 30 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பிரபல மருந்து நிறுவனங்களின் பெயரில் போலியான மருந்துகளைத் தயாரித்த இரண்டு தொழிற்சாலைகள் மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த தொழிற்சாலைகள் மூலம் இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான போலி மருந்துகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த தொழிற்சாலைகள் மூலம் சுமார் ரூ. 2,000 கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையை நடத்திய ராஜா உட்பட 10 பேர் தலைமறைவாக உள்ளனர்.

சிபிசிஐடி ரெய்டு மற்றும் சோதனை

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர். நீதிமன்ற அனுமதி பெற்று, சிபிசிஐடி போலீஸார் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து சோதனையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், மாத்திரைகளின் பேட்ஜ் எண்கள் பட்டியலை வைத்து போலி மாத்திரைகள் இருக்கிறதா என ஆய்வு நடத்தப்படுகிறது. 100 நல்ல மாத்திரைகளுடன் 400 போலி நிறுவன மாத்திரைகளை கலந்து விற்பனை செய்ததாகத் தெரிகிறது. பரிசோதனைக்காக மாதிரிகள் (சாம்பிள்கள்) எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தொழிற்சாலையில் பறிமுதல்

இந்த தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பூர்ணாங்குப்பம் பகுதியில் ஒரு போலி மாத்திரை தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் குடோன் இடையார் பாளையத்தில் கண்டறியப்பட்டது. அந்த குடோனில், 50-க்கும் மேற்பட்ட முக்கிய நோய்களுக்கு தற்போது பயன்படுத்தப்படும் மாத்திரைகள் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. போலி மாத்திரைகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் பேக்கிங் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 30 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜனவரி 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Embed widget