மேலும் அறிய

நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; வேளாண்துறை உயர் அதிகாரியின் அறிவுறுத்தல் என்ன?

நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; கவனத்துடன் பூச்சி மருந்து தெளிக்க அறிவுறுத்தல்

பூச்சிகளும் வாழ வேண்டும், நாமும் வாழ வேண்டும். வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம். பூச்சிகளை பாதுகாத்து செலவினை குறைக்கலாம். என்னது பூச்சிகளை பாதுகாக்கணும்னு சொல்கிறார்களே என்று பார்க்கிறீர்களா. இந்த பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள்.

விவசாயிகளின் சாகுபடி பயிர்களுக்கு முக்கிய எதிரியே பயிர்களை அழிக்கும் பூச்சிகள்தான். ஆனால் இதில் நன்மை செய்யும் பூச்சிகளும் அதிகம் உள்ளது. இயற்கையின் படைப்பு அப்படி உள்ளது. சாகுபடி பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை உணவாக்கி விவசாயிகளின் நண்பனாக ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை பற்றி தெரிந்து கொள்வோம்.

வயல்வெளியில் ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளது. இதனை மருந்து அடித்து கொல்லாமல் பாதுகாத்தால் தீமை செய்யும் பூச்சிகள் தானாகவே அழிந்து விடும். தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளித்து தீமை செய்யும் இலை சுருட்டு புழு, குருத்துப்புழு, புகையான் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இதுகுறித்து விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளதாவது:
 
வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம் என்பதை மறந்து விடக்கூடாது. அதில் இயற்கையாகவே நன்மை செய்யும் பூச்சிகள் ஏராளமாக உள்ளன. நன்மை செய்யும் பூச்சிகள் பயிர்களை தின்பது இல்லை. அது உயிர் வாழ தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே தங்களுக்கு உணவாக்கி கொள்கிறது. இதன் மூலம் இயற்கையாகவே தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பூச்சி மருந்து அடிப்பதன் மூலம் நாமே நன்மை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், பாதுகாப்பாக பயிரின் உள்ளே உள்ள தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைகிறது. மேலும் சமசீரற்ற உரங்களை அதிகளவில் இடுவது, தழைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியாவை தேவைக்கு அதிகமாக இட்டு தீமை செய்யும் பூச்சிகளை கவர்வதும் பயிர் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
 
எனவே வயல் ஆய்வு மேற்கொண்டு நன்மை செய்யும் பூச்சிகளை விட தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். இது பொருளாதார நுழைவு நிலையை தாண்டுவதாக இருந்தால் குறுவை பயிருக்கு கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கான அளவில் தெளிக்க வேண்டும்
 
1.       அசாடிராக்டின் 0.03% (இ.சி) - 400 மில்லி
2.       கார்போ சல்பான் 25% (இ.சி) – 300 மில்லி
3.       பிப்ரோபெசின் 25% (இ.சி) – 300 மில்லி
4.       குளோரிபைரிபாஸ் 20% (இ.சி) – 200 மில்லி.
 
தேவை இல்லாமல் மருந்து அடிப்பது மூலம் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுமே ஒழிய கட்டுப்படுத்துவது இயலாமல் போகும். எனவே கவனமுடன் பூச்சி மருந்துகளை கையாண்டால் உற்பத்தியை உயர்த்த முடியும். நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் பாதுகாக்கும் நிலையில் சாகுபடியும் அதிகரிக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை, எனவே தேவையான நேரத்தில் மட்டுமே பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Embed widget