மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் நாசம்

''தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது''

குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். ஆனால்  தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும்,  வாய்க்கால்களில் தண்ணீர் வராததால்,  பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை  கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் நாசம்

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், வாய்கால்களில் மழை நீர் வடியாததால், மின் மோட்டாரினால் சாகுபடி செய்துள்ள பயிர்கள், தற்போது பால் பருவம் எனும் சூழ் பருவத்தில் உள்ள நிலையில் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் தொடர் பலத்த மழை பெய்தால், சாய்ந்துள்ள  அனைத்தும் நெற்பயிர்கள், முளைத்து பதறாகும் நிலை ஏற்படும்.

இதுபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், கோவில்பத்து, கோவில்வெண்ணி, கோவிலடி, அவளிவநல்லுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது சூழ் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்திருப்பதால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகியள்ளனர். இக்கிராமங்களில் உள்ள வாய்க்காலை சரிவர துார் வாராததால்,, மேலும் தொடர்ந்து மழை பெய்து,  பால் பருவம் எனும் சூழ் பருவத்தில் உள்ள பயிர்கள் அனைத்தும் வீணாகி பதறாகும்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் நாசம்

குறுவை பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடை செய்தால், ஒரு ஏக்கருக்கு  சுமார் 35 நெல் மூட்டைகள்வரை வரும், அதே தொடர் மழையினால், சுமார் ஏக்கருக்கு சுமார் 15 மூட்டை கிடைப்பதே சிரமமாகும். தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால், குறுவை சாகுபடிக்காக ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்து, சூழ் பருவத்தில் இருக்கும் குறுவை நெற்பயிர் பதறாகும்.  குறுவை சாகுபடிக்கு செய்த  செலவு தொகையை கிடைப்பதே சிரமமாகும்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் நாசம்

கூட்டுறவு வங்கிகளில் நகைகள், இடத்தின் பத்திரங்களை அடகு வைத்தும், தனியாரிடம் பணம் வட்டிக்கு வாங்கியும், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், பலத்த மழையினால் வீணாகியுள்ள குறுவை சாகுபடிக்கு, அதிகாரிகள் பார்வையிட்டு, இழப்பீடு வழங்க வேண்டும்,  உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகள், வாய்க்கால்களை துார் வாரி, வயலில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget