மேலும் அறிய

தஞ்சாவூர்: இடியுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தின் வல்லம், ஆலக்குடி, பூதலூர் பகுதிகளில் மிக கனத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தஞ்சை நகர் பகுதியில் மாலை தொடங்கிய கனத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பெண்கள் வெகுவாக சிரமப்பட்டனர்.
 
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் தெற்கு வீதி பகுதியில் கழிவுநீர் சாக்கடை கட்டும் பணிகளால் சாக்கடை நீர் சாலைகளில் மழை நீரோடு பெருக்கெடுத்து ஓடியது.
 
இதே போல் தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி மற்றும் பூதலூர் பகுதிகளில் மிக கனத்த மழை பெய்தது. தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நாற்று நட்டுள்ள நிலையில் இந்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடி மற்றும் மின்னலுடன் பெய்த கனமழையால் ஓரிரு இடங்களில் மரக்கிளைகள் மற்றும் சிறிய வகை மரங்கள் முறிந்து விழுந்தது. தஞ்சையில் இருந்து கரம்பை வழியாக ஆலக்குடி, புதுக் கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு பணி முடிந்து திரும்பிய பொதுமக்கள் இந்த மழையால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
 

தஞ்சாவூர்: இடியுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 
மேலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மின்தடையும் ஏற்பட்டது. தஞ்சையின் சுற்று பகுதிகளில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கியமாக கிராமப்புறங்களில் தஞ்சை திருச்சி போன்ற பகுதிகளில் பணிக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் நால்ரோடு பகுதியில் சாலைகளில் தண்ணீர் வெல்லம் போல் பெருக்கெடுத்து ஓடியது எதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்தனர். மேலும் மின்தடையும் இருந்ததால் வெகுவாக அவதிக்குள்ளாகினர்.
 
குறுவை சாகுபடிக்காக நாட்டு நட்டு ஒரு வாரமே ஆன நிலையில் இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி இளம் நாற்றுக்கள் அழுகி பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தரப்பில் கவலையுடன் தெரிவித்தனர். நால்ற பறித்து நற்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த மழையால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் நிலையும் உள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். தமிழக அரசு வழங்கிய குறுவைத் தொகுப்புகளை இன்னும் ஏராளமான விவசாயிகள் பெறாமல் உள்ளனர். காரணம் இன்னும் அவர்கள் சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளது தான். இந்நிலையில் நேற்று பெய்த இந்த கனமழையால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.  தொடரும் என்ற நிலை ஏற்பட்டால் சாகுபடி பணிகளில் வெகுவாக சுணக்கம் ஏற்படும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget