மேலும் அறிய

“தொடங்கியது குறுவை கோடை அறுவடை” பாரம்பரிய வழிபாட்டுடன் வயலில் இறங்கிய விவசாயிகள்..!

”திருவாரூர் மாவட்டத்தில் கோடை அறுவடை தொடங்கியது - மகசூழ் இழப்பு என விவசாயிகள் வேதனை”

திருவாரூர் மாவட்டத்தில் கோடை குறுவை நெற்பயிர் அறுவடை பாரம்பரிய வழிப்பாட்டு முறையுடன் தொடங்கிய நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடி அறுவடை - பாரம்பரிய முறைபடி தொடங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குருவை, சம்பா, தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரிவர கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் கடந்து சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு, போர்வெல் மூலமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வலங்கைமான் மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய மகசூல் இழப்பை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மகசூழ் இழப்பில் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை குறுவை நெற்பயிர் சாகுபடி பணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 21 ,000 ஏக்கர் பரப்பளவில் ஆழ்துளை கிணறு மூலமாக விவசாயிகள் நெற்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் பருவம் தவறிய பெய்த கனமழையால் கோடை கால குறுவை நெற்பயிர்கள் மழை நீரால் சாய்ந்தது. பிறகு விவசாயிகள் மழைநீரை வடியவைத்தும் அதற்கான உரங்களை தெளித்தும் நெற்பயிர்களை காப்பாற்றி வந்தனர்.  ஆனால், அவர்கள் நினைத்ததை விட அதிக மழை பெய்ததால் முழுமையாக நெற்பயிற்களை அப்போதே விவசாயைகளால் காப்பாற்ற முடியவில்லை.

வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து பூசை செய்த விவசாயிகள்

இந்த நிலையில் தற்போது நன்னிலம் பகுதியில் கோடைகால குருவை பயிர் அறுவடை பணிகள் இன்று தொடங்கியது. விவசாயிகள் நெல் பயிர்களுக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் பூ  பொட்டுக்கடலை சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து தீபாராதனை காண்பித்து சூரியனுக்கு வழிபாடு செய்த பின்னர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி அறிவாள் மூலம் நெற்கதிர்களை சிறிது தூரம் அறுத்து அறுவடை செய்த பின் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.

விவசாயி சொல்லும் வேதனை கதை

இதுகுறித்து விவசாயி குமரகுருபரன் கூறுகையில் :  பருவம் தவறி பெய்த மழையால் கோடை நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய முறைப்படி சூரிய பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அறிவாளால் சிறிது நேரம் அறுவடை செய்த பின்னர், கதிர் இயந்திரம் கொண்டு அறிவுடைப்பணியில் ஈடுபட்டோம். மேலும் மழையின் காரணமாக கூடுதல் செலவு செய்து தற்பொழுது அறுவடை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 30 முதல் 35 மூட்டை நெல் மணிகள் கிடைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை கிடைப்பதே சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி வேதனை தெரிவித்தார்.

மேட்டூர் அணையும் திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படாததால் வரும் காலங்களில் எப்படி விவசாயம் செய்வது என்று தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Tata Harrier EV: பெட்ரோல், டீசல் மாடல்களை தட்டித் தூக்கிய ஹரியர் EV; ஆச்சர்யமூட்டும் விற்பனை முடிவுகள்; காரணம் என்ன.?
பெட்ரோல், டீசல் மாடல்களை தட்டித் தூக்கிய ஹரியர் EV; ஆச்சர்யமூட்டும் விற்பனை முடிவுகள்; காரணம் என்ன.?
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
Embed widget