மேலும் அறிய

எரிபொருள் இல்லா இயந்திரம்... விவசாயிகளுக்கு கை கொடுக்கும் நவீன தொழில்நுட்பம்

வீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தோழகிரிப்பட்டியில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக செலவுகளும் குறைந்து, நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவித்தனர்.

விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. முன்பு ஏர் கலப்பையில் உழவு செய்து வந்த விவசாயிகள் அதற்கு பிறகு டிராக்டர் இயந்திரத்தில் இரும்பு கலப்பையை இணைத்து வயலை உழுதனர். அதிலிருந்து நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர். இதனால் நேர விரயம், செலவுகள் அதிகளவில் மிச்சமாகிறது.


எரிபொருள் இல்லா இயந்திரம்... விவசாயிகளுக்கு கை கொடுக்கும் நவீன தொழில்நுட்பம்

அந்தளவிற்கு விவசாய தொழிலில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறைதான். விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கின்றன. ஒரு கதவு அடைப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்பார்கள். அது போல் விவசாய தொழிலாளர்கள் கட்டிடப் பணி உட்பட பல்வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர் இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டது.

நடவு பணியில் இருந்து களைப்பறித்தல், உரம் தெளித்தல் உட்பட அனைத்திற்கும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் நவீன கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக மாறி உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் தோழகிரிப்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணியை நடந்து வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது தட்டுப்பாடான நிலையில் தான் இருந்து வருகிறது.

இப்பகுதியில் கடலை, உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பணிகளுக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எரிபொருள் இன்றி எளிமையாக மனித சக்தியை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை பயன்படுத்தி விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி சாகுபடியை தொடக்கி விடலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கடலையை விதைக்க முடியும். கடலை மட்டுமின்றி, உளுந்து,பயறு போன்றவற்றையும் இந்த இயந்திரத்தை கொண்டு நடவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த இயந்திரத்தில் விதைக்கடலைகளை நிரப்பி கையால் தள்ளிக் கொண்டு சென்றால் வரிசையாக நடவு செய்து விட முடியும். மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் இதன் மூலம் தானியங்களை நடவு செய்ய இயலும். இதனால் செலவுகள் குறைகிறது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது நாமே இதை பயன்படுத்தி தானியங்களை விதைக்க முடியும். தற்போது நவீனமான கருவிகள் கிடைப்பது விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை அனைத்து பகுதியிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில் இது போன்ற எளிமையான கருவிகள் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து தருகின்றன என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget