மேலும் அறிய

பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

ஊரை விட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 வது முறையாக  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலணியை சேர்ந்த அல்லிமுத்து, தினேஷ், விக்னேஷ் உள்ளிட்ட 7 குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இதனால் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் இந்த 7 குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக  கூறப்படுகிறது.  இதனைத்  தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்  பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லிமுத்து, தினேஷ் உள்ளிட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் வக்கீல் சரவணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்களை எடுத்துவந்தால் அதனை வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று தடைவிதித்தும் ஊர் கட்டுப்பாட்டை மீறி தங்களுக்கு யாராவது உதவிசெய்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து வருகின்றனர்.

INDIA Alliance: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சூப்பர் பெயர்...பிரதமர் மோடியை எதிர்க்க புதிய தலைவர்..அதிர வைக்கும் தகவல்கள்


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை இந்து கோயிலுக்கு வரவேண்டும், திருநீர் பூசவேண்டும், வரிகொடுக்க வேண்டுமென்று மிரட்டுகின்றனர். வருவாய்த்துறையினர் அழைத்து பேசினால் ஊரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறிவிடுகின்றனர். உண்மையை மறைத்து 7 குடும்பத்தினரையும் ஒதுக்கிவைத்து துன்புருத்தி வருவதாக மனு அளித்தனர். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்கள் மற்றும் அவர்களுக்க ஆதரவாக வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Anbumani Letter To CM: அனைத்து வகை குரும்பர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

அதனையடுத்து பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம பஞ்சாயத்தார்கள் தங்களை ஊருக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி கடந்தவாரம் 10 -ம் தேதியும் மனு அளித்தனர். இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுஅளித்தனர். இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகானப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியநிலையில், மீனவர்கள் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டேரிக்கும் வெய்யிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Vanitha Open Talk: இன்னொரு திருமணம்... இனி விவாகரத்தாக வாய்ப்பே இல்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை வனிதா...


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை  காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீன் இருதரப்பையம் அழைத்து பேச்சுவாரத்தை நடத்தி விரைவில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget