மேலும் அறிய

கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!

திமுக நகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாநாகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம்மிரட்டும் தோனியில் பேசினர்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான கடை நேற்று ஏலம் விடப்பட்ட நிலையில், திமுக மற்றும் வணிகர்கள் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி ஆணையரை மாற்ற கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ், 28.73 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையம் ஆகியவை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் பணிகள் துவங்கி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தின் உள்புறத்தில் 54 கடைகளும், திருவையாறு பேருந்து பகுதிகளில் 39 கடைகளும் என 93 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
 
கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!
 
இந்த கடைகளுக்கான ஏலம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.  இதைதொடர்ந்து காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக குவிந்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெட்டி ஒன்றில் போட்டனர்.  காலை முதல் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சியையும், 10க்கும் மேற்பட்ட எல்ஈடி டிவி மூலம் ஒளிபரப்பு செய்தனர். பின்னர், அந்த பெட்டியை மாநகராட்சி கமிஷனர் சரணவகுமார் முன்னிலையை ஏலம் எடுப்பவர்கள் வழங்கிய விண்ணப்பங்களை அலுவலர்கள் பிரித்தனர். 
 
அப்போது, தி.மு.க. நகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அலுவலகத்தின் முன் வந்து,  மாநாகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் பலரும் வெளியில் காத்துக்கொண்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அனைவரையும் வர சொல்லாமல் நடந்துக்கொள்ளவது தவறு என மிரட்டும் தோனியில் பேசினார். ஆனால் கமிஷனர் எதையும் கண்டுக்கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
 
கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!
 
இந்நிலையில், ஏற்கனவே பழயை பேருந்து நிலையம் பகுதிகளில் கடை வைத்திருந்த வணிகர்கள், தி.மு.க., நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தின் வெளியில் நின்றுக்கொண்டு, கடைகளை எங்களை ஓதுக்கீடு செய்ய வேண்டும், திமுகவினரை கண்டு கொள்ளாமல் ஏலம் நடத்துவது தவறு, கொரோனா காலத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் செயல்படும் மாநகராட்சி ஆணையரை உடனே மாற்ற வேண்டும் என கோஷமிட்டு, அவரை கண்டித்து  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
பின்னர், தஞ்சை மாநகராட்சி ஆணையரை ஒரு சிலர் ஒருமையில் திட்டி கோஷமிட்டனர்.  இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிற்பகலில் மாநாகராட்சி ஆணையர் சரவணகுமார், திமுக நிர்வாகிகள் மற்றும் வணிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த திமுகவினர், மாநகராட்சி ஆணையரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த ஆணையர், அனைவரையும் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!
 
தொடர்ந்து தனது அறைக்கு சென்ற ஆணையர் சரவணக்குமார், தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் வணிகர்களை அழைத்து பேசினார்.  பின்னர் வணிகர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு கூறுகிறேன் என்று பதிலளித்ததின் பேரில் திமுக, வணிகர்கள் வெளியில் வந்தனர்.
 இதனால் மாநகராட்சி அலுவலகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தலைப்பு செய்திகள்

1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
"அண்ணாமலை சென்றாலும் பா.ஜ.க-வில் வெற்றிடம் இல்லை!" - தஞ்சை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
Embed widget