மேலும் அறிய

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

சீர்காழி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சீர்காழி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இன்று சீர்காழி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மருந்து இருந்தவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவருகிறது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 33 ஆயிரம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒன்றாக தமிழகத்தில் வரும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை  அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி அவசியம் செலுத்திகொள்ள மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியும்  வருகிறது. தயக்கமும் ,அச்சமும் இன்றி பொதுமக்கள்தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

மே 20 ஆம் தேதி முதல் 18 வயதுக்குமேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி செயல்படுத்திவரும் நிலையில் சீர்காழி வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை,திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதரநிலையம்,நல்லூர், குன்னம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிகளும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. 

கடந்த சில தினங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதரநிலையம்,கொள்ளிடம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமின்றி ஒரு சிலர் மட்டுமே முகாம்களில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி வந்தனர். 

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

இந்த சூழலில் இன்று சீர்காழி நகராட்சி தொடக்கபள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இங்கு தடுப்பூசி  செலுத்த பலரும் ஆர்வமுடன் வந்தனர்.  ஆனால் மருந்துகள் குறைவாகவே இருந்தது. இருந்தவரை தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு செலுத்தி விட்டு , மருத்துவத் துறையினர் முகாமை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மேலும் தடுப்பூசி இல்லாததால் ஆர்வமுடன் ஆதார் அட்டைகளை எடுத்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் தடுப்பூசி செலுத்த வந்திருந்த 45 வயதுக்கு மேற்பட்டோர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர். 

மேலும் சீர்காழியில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றனர். கோவேக்சின் தடுப்பூசி சீர்காழி வட்டாரத்தில் செலுத்தப்படுவதில்லை. ஆகையால் அரசு அறிவித்துள்ளப்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சீர்காழி வட்டாரத்தில் அதிகளவு தடுப்பூசி மருந்துகளை மாவட்ட சுகாதார இயக்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget