மேலும் அறிய

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

சீர்காழி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சீர்காழி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இன்று சீர்காழி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மருந்து இருந்தவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவருகிறது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 33 ஆயிரம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒன்றாக தமிழகத்தில் வரும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை  அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி அவசியம் செலுத்திகொள்ள மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியும்  வருகிறது. தயக்கமும் ,அச்சமும் இன்றி பொதுமக்கள்தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

மே 20 ஆம் தேதி முதல் 18 வயதுக்குமேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி செயல்படுத்திவரும் நிலையில் சீர்காழி வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை,திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதரநிலையம்,நல்லூர், குன்னம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிகளும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. 

கடந்த சில தினங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதரநிலையம்,கொள்ளிடம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமின்றி ஒரு சிலர் மட்டுமே முகாம்களில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி வந்தனர். 

சீர்காழியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பாதியில் நிறுத்தப்பட்ட முகாம்!

இந்த சூழலில் இன்று சீர்காழி நகராட்சி தொடக்கபள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இங்கு தடுப்பூசி  செலுத்த பலரும் ஆர்வமுடன் வந்தனர்.  ஆனால் மருந்துகள் குறைவாகவே இருந்தது. இருந்தவரை தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு செலுத்தி விட்டு , மருத்துவத் துறையினர் முகாமை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மேலும் தடுப்பூசி இல்லாததால் ஆர்வமுடன் ஆதார் அட்டைகளை எடுத்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் தடுப்பூசி செலுத்த வந்திருந்த 45 வயதுக்கு மேற்பட்டோர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர். 

மேலும் சீர்காழியில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றனர். கோவேக்சின் தடுப்பூசி சீர்காழி வட்டாரத்தில் செலுத்தப்படுவதில்லை. ஆகையால் அரசு அறிவித்துள்ளப்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சீர்காழி வட்டாரத்தில் அதிகளவு தடுப்பூசி மருந்துகளை மாவட்ட சுகாதார இயக்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget