மேலும் அறிய

திருவாரூரில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்...!

அரிசி ஆலை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் வரும் தண்ணீர் அனைத்தும் மஞ்சள் நிறத்திலும் பச்சை நிறத்தில் உள்ளது.

அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி. குடிநீர் கழிவு நீராக வருவதாக குற்றச்சாட்டு
 
திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே உள்ள ஒட்டகுடியில் தனியார் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரிசியாக அரைத்து அரசுக்கு வழங்கும் ஒப்பந்தத்தையும் பெற்று இந்த அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் வரும் தண்ணீர் அனைத்தும் மஞ்சள் நிறத்திலும் பச்சை நிறத்தில் உள்ளது. அடிப்படைக்காரணம் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றாமல் அறைக்குள்ளேயே திறந்து விடுவதால் நிலத்துக்குள் அந்தக் கழிவு தண்ணீர் புகுந்து அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை மாசுபடுத்தி விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவாரூரில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்...!
 
மேலும் இந்த தண்ணீரை தான் அப்பகுதி மக்கள் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த குடிநீரை குடிப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும்  என்ற அச்சத்துடன் தினந்தோறும் இந்த தண்ணீரை குடித்து வருகிறோம். மேலும் ஊராட்சி குடிநீர் காலை ஒரு மணி நேரம் மட்டுமே வருவதால் அந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் இந்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களில் நேரடியாக விடப்படுவதால், விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தாங்கள் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வருகிறோம் ஆனால் இந்த கழிவுநீரால் நாங்கள் செய்த செலவு அனைத்தும் பாழாகி போகிறது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்...!
 
அரிசி ஆலையில் நெல் அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் கழிவுகள் அனைத்தும் மதிய நேரங்களில் கரி துகள்களாக, பறக்கின்றன. ஒட்டகுடியில் இருந்து குளிக்கரை பகுதிவரை சாலையில் கரித்துகள்கள் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்த முற்படுகிறார்கள் தவிர, பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருவாரூரில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்...!
இதுகுறித்து அரவை மில் உரிமையாளர் குமாரிடம் கேட்டபொழுது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி கழிவு நீரை சுத்திகரித்து அதன்பின்தான் வெளியிடுகிறோம் எனவும் குடிநீர் கழிவுநீர் ஆவதற்கு அரவை மில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Embed widget