![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற கால அவகாசம் நீட்டிப்பு
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
![முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற கால அவகாசம் நீட்டிப்பு Chief Minister State Youth Award extended till 31st Thanjavur Collector Information - TNN முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற கால அவகாசம் நீட்டிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/b515659436a3cc44d875869a9bfa96581716459771405733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தவிருது ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2024 -ஆம் ஆண்டிற்க்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
சேவைகள் கருத்தில் கொள்ளப்படும்
ஏப்ரல் 1, 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, 2024 (31.03.2024) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.(சான்று இணைக்கப்பட வேண்டும்).
தன்னார்வத்துடன் தொண்டு செய்து இருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய/ மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் /கல்லூரிகள்! பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு இவ்விருதிற்கு பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மேற்காணும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 31ம் தேதி மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொலைபேசியில் விபரங்கள் அறியலாம்
மேலும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அலுவலக தொலைபேசி எண்.04362-235633 என்ற எண்ணிலும், 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)