மேலும் அறிய

சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

சீர்காழி அருகே வைத்தியநாதபுரத்தில் வயல் சீரமைப்பு பணியின் போது குப்பைகளுக்கு தீவைக்கபட்டதில் ஏராளமான பனைமரங்கள் எரிந்து சேதமானது.

பனை மரத்தை பொதுவாக கற்பக விருட்சம் மரத்துடன் ஒத்து கூறுவார்கள்.  கேட்டதை தரும் கற்பக விருட்சம் மரம் போல், பனைமரங்களும் பனை ஓலை, நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் பொருட்கள் என மனிதனால் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பயன்களை தருவது பனை மரம்தான். 
அத்தகைய பனை மரம் கடந்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழியும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது. கணக்கில்லாமல் பனை மரங்கள் அழிந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.



சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

கடைசியாக எடுக்கப்பட்ட  கணக்கின் படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. என்றும் அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பனைமரங்கள் வெட்டப்பட்டதால் அது பாதியாக குறைந்து 2.50 கோடியாகிவிட்டது என பனை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பனைமரங்கள் அழிவுக்கு  தொடர்ந்து வெட்டப்படுவதாலும், அவற்றை ஈடு செய்யும் விதத்தில் புதிய பனை மரங்கள் வளர்க்கப்படாததும் காரணமாக செல்லப்படுகிறது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறியப்படுகிறது. ஆனாலும் அதற்கான முக்கியதுவம் என்பது தமிழகத்தில் குறைந்தது மரங்களும் படிப்படியாக அழிய தொடங்கி அழிந்து வருகிறது. பல சிறப்புகளை உடைய பனைமரங்களை நாம் காக்க விட்டால் அதற்கு இயற்கை தரும் பேரிடர்களை நாம் பரிசாக ஏற்கும் சூழல் உருவாகும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் குமரேசன் என்பருக்கு சொந்தமான நிலம் உள்ளது.மேட்டூர் அணையில் வரும் 12 ம் தேதி தண்ணீர் திறக்கபடவுள்ள நிலையில் சம்பா சாகுபடி பணிக்காக நிலத்தை சீரமைக்கும் பணியை குமரேசன் துவங்கினார். பணியாளர்கள் சிலர் நிலத்தில் வளர்ந்து காய்ந்து கிடந்த செடி, கொடிகளை அகற்றி தீ வைத்தனர். அப்போது காற்றின் வேகத்தில் தீ பொறிகள் பறந்து அருகில் இருந்த பனைமரத்தில் பட்டு தீ பிடித்தது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இதனையடுத்து தீயை அணைக்க விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கு இருந்த ஏராளமான பனைமரங்கள் எரிந்து கருகியது. வயல் பகுதி என்பதால் தீயணைப்பு வாகனமும் செல்ல முடியாததால் மரங்கள் முற்றிலும் கருகியது. எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். அங்கு விவசாயம் செழிக்கும், எங்கு பனைமரங்கள் காய்ந்து தலை சாய்க்கிறதோ அங்கு வறட்சி ஏற்பட்டு அங்கு பஞ்சம் ஏற்படும் என கூறுவார். மரம் தீயில் கருகி எரிந்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget