மேலும் அறிய

சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

சீர்காழி அருகே வைத்தியநாதபுரத்தில் வயல் சீரமைப்பு பணியின் போது குப்பைகளுக்கு தீவைக்கபட்டதில் ஏராளமான பனைமரங்கள் எரிந்து சேதமானது.

பனை மரத்தை பொதுவாக கற்பக விருட்சம் மரத்துடன் ஒத்து கூறுவார்கள்.  கேட்டதை தரும் கற்பக விருட்சம் மரம் போல், பனைமரங்களும் பனை ஓலை, நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் பொருட்கள் என மனிதனால் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பயன்களை தருவது பனை மரம்தான். 
அத்தகைய பனை மரம் கடந்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழியும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது. கணக்கில்லாமல் பனை மரங்கள் அழிந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.



சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

கடைசியாக எடுக்கப்பட்ட  கணக்கின் படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. என்றும் அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பனைமரங்கள் வெட்டப்பட்டதால் அது பாதியாக குறைந்து 2.50 கோடியாகிவிட்டது என பனை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பனைமரங்கள் அழிவுக்கு  தொடர்ந்து வெட்டப்படுவதாலும், அவற்றை ஈடு செய்யும் விதத்தில் புதிய பனை மரங்கள் வளர்க்கப்படாததும் காரணமாக செல்லப்படுகிறது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறியப்படுகிறது. ஆனாலும் அதற்கான முக்கியதுவம் என்பது தமிழகத்தில் குறைந்தது மரங்களும் படிப்படியாக அழிய தொடங்கி அழிந்து வருகிறது. பல சிறப்புகளை உடைய பனைமரங்களை நாம் காக்க விட்டால் அதற்கு இயற்கை தரும் பேரிடர்களை நாம் பரிசாக ஏற்கும் சூழல் உருவாகும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் குமரேசன் என்பருக்கு சொந்தமான நிலம் உள்ளது.மேட்டூர் அணையில் வரும் 12 ம் தேதி தண்ணீர் திறக்கபடவுள்ள நிலையில் சம்பா சாகுபடி பணிக்காக நிலத்தை சீரமைக்கும் பணியை குமரேசன் துவங்கினார். பணியாளர்கள் சிலர் நிலத்தில் வளர்ந்து காய்ந்து கிடந்த செடி, கொடிகளை அகற்றி தீ வைத்தனர். அப்போது காற்றின் வேகத்தில் தீ பொறிகள் பறந்து அருகில் இருந்த பனைமரத்தில் பட்டு தீ பிடித்தது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இதனையடுத்து தீயை அணைக்க விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கு இருந்த ஏராளமான பனைமரங்கள் எரிந்து கருகியது. வயல் பகுதி என்பதால் தீயணைப்பு வாகனமும் செல்ல முடியாததால் மரங்கள் முற்றிலும் கருகியது. எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். அங்கு விவசாயம் செழிக்கும், எங்கு பனைமரங்கள் காய்ந்து தலை சாய்க்கிறதோ அங்கு வறட்சி ஏற்பட்டு அங்கு பஞ்சம் ஏற்படும் என கூறுவார். மரம் தீயில் கருகி எரிந்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Thanjavur District Power Shutdown (03.07.2026)
Thanjavur District Power Shutdown (03.07.2026)"பவர் பேங்க் சார்ஜ் போடுங்கோ... இன்வெர்ட்டர் ரெடியா?... நாளை 3.7.26 கரண்ட் கொஞ்சம் ஓய்வெடுக்குது!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
Embed widget