மேலும் அறிய

சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

சீர்காழி அருகே வைத்தியநாதபுரத்தில் வயல் சீரமைப்பு பணியின் போது குப்பைகளுக்கு தீவைக்கபட்டதில் ஏராளமான பனைமரங்கள் எரிந்து சேதமானது.

பனை மரத்தை பொதுவாக கற்பக விருட்சம் மரத்துடன் ஒத்து கூறுவார்கள்.  கேட்டதை தரும் கற்பக விருட்சம் மரம் போல், பனைமரங்களும் பனை ஓலை, நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் பொருட்கள் என மனிதனால் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பயன்களை தருவது பனை மரம்தான். 
அத்தகைய பனை மரம் கடந்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழியும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது. கணக்கில்லாமல் பனை மரங்கள் அழிந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.



சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

கடைசியாக எடுக்கப்பட்ட  கணக்கின் படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. என்றும் அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பனைமரங்கள் வெட்டப்பட்டதால் அது பாதியாக குறைந்து 2.50 கோடியாகிவிட்டது என பனை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பனைமரங்கள் அழிவுக்கு  தொடர்ந்து வெட்டப்படுவதாலும், அவற்றை ஈடு செய்யும் விதத்தில் புதிய பனை மரங்கள் வளர்க்கப்படாததும் காரணமாக செல்லப்படுகிறது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறியப்படுகிறது. ஆனாலும் அதற்கான முக்கியதுவம் என்பது தமிழகத்தில் குறைந்தது மரங்களும் படிப்படியாக அழிய தொடங்கி அழிந்து வருகிறது. பல சிறப்புகளை உடைய பனைமரங்களை நாம் காக்க விட்டால் அதற்கு இயற்கை தரும் பேரிடர்களை நாம் பரிசாக ஏற்கும் சூழல் உருவாகும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் குமரேசன் என்பருக்கு சொந்தமான நிலம் உள்ளது.மேட்டூர் அணையில் வரும் 12 ம் தேதி தண்ணீர் திறக்கபடவுள்ள நிலையில் சம்பா சாகுபடி பணிக்காக நிலத்தை சீரமைக்கும் பணியை குமரேசன் துவங்கினார். பணியாளர்கள் சிலர் நிலத்தில் வளர்ந்து காய்ந்து கிடந்த செடி, கொடிகளை அகற்றி தீ வைத்தனர். அப்போது காற்றின் வேகத்தில் தீ பொறிகள் பறந்து அருகில் இருந்த பனைமரத்தில் பட்டு தீ பிடித்தது.


சீர்காழி அருகே தீப்பிடித்து எரிந்த பனைமரங்கள்!

இதனையடுத்து தீயை அணைக்க விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கு இருந்த ஏராளமான பனைமரங்கள் எரிந்து கருகியது. வயல் பகுதி என்பதால் தீயணைப்பு வாகனமும் செல்ல முடியாததால் மரங்கள் முற்றிலும் கருகியது. எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். அங்கு விவசாயம் செழிக்கும், எங்கு பனைமரங்கள் காய்ந்து தலை சாய்க்கிறதோ அங்கு வறட்சி ஏற்பட்டு அங்கு பஞ்சம் ஏற்படும் என கூறுவார். மரம் தீயில் கருகி எரிந்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Embed widget