மேலும் அறிய

மத்திய இடைக்கால பட்ஜெட் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? இல்லையா? மனம் திறந்த தஞ்சை விவசாயிகள்

தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதி, பிஎம் கிசான் திட்டத்தில் நிதி உயர்த்தப்படாதது போன்றவை ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தஞ்சை மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.‌ இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு ஆதரவும், அதிருப்தியும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்துள்ளது. இந்த பட்ஜெட் பற்றி தஞ்சை விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜீவகுமார்: தமிழகத்திற்கு  தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது ஏமாற்றம் அளிக்கிறது. பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்குவதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

சமூக ஆர்வலர் ராமதாசு: 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில்கள் பெட்டிகள் தரத்தில் புதுப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மாநில வளர்ச்சிக்கு வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் பெரும்பாலானவை பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜீவரத்தினம்: மத்திய பட்ஜெட்டில் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படாதது நல்ல விஷயம். சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆன்மீக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். 


மத்திய இடைக்கால பட்ஜெட் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? இல்லையா? மனம் திறந்த தஞ்சை விவசாயிகள்

சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா: நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜ் மையங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பால் மின்சார வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற திட்டத்தால் விவசாயிகள் பயனடைவர். தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு புதிய ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விவசாயி கரம்பை குமார்: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எதுவும் இல்லை. முக்கியமாக விவசாயிகள் நலன் கருதி நெல் உலர்த்தும் களம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget