மேலும் அறிய

எஸ்ஐஆர் பணியால் ஏற்பட்ட பிரச்சினை... தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி பணியாளர்: கும்பகோணத்தில் அதிர்ச்சி

தரக்குறைவாக ஒருமையில் பேசிய ஆணையர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,  தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்

தஞ்சாவூர்: எஸ்ஐஆர் விண்ணப்பத்தால் தமிழகத்தில் இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ என்று கும்பகோணம் மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்ஐஆர் விண்ணப்பத்தை மக்களுக்கு சரியாக கொடுக்கவில்லை என்று கூறி மாநகராட்சி ஆணையர் தரக்குறைவால் பேசியதால் 84 மாத்திரைகள் சாப்பிட்டு அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம்தான் அது. தற்போது கும்பகோணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தற்கொலை முயற்சி மேற்கொண்ட அங்கன்வாடி பணியாளர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து பணிகளை புறக்கணித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்.

கும்பகோணம் வட்டம், கொற்கை, துறையூரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சித்ரா (59), இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். இவர், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வழிநடப்பு பகுதி மற்றும் ஈவேரா ஆகிய 2 அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடி பணியாளராக கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்ஐஆர் விண்ணப்பம் தொடர்பான பணி சித்ராவிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை, கும்பகோணம் ஆணையர் காந்திராஜ், சித்ராவிடம் நவ.17-ம் தேதி (நேற்று) இரவுக்குள் 200 எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லை விட்டால், உங்கள் அதிகாரிகளிடம் கூறி சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்றும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த சித்ரா,  இன்று காலை, தனது வீட்டில் இருந்த பல்வேறு வகையான 84 மாத்திரைகளை வீட்டிலும், நாச்சியார் கோவில் வழிநடப்பு மையத்தில் சாப்பிட்டுள்ளார். 

பின்னர் தான் மாத்திரைகளை சாப்பிட விபரம் மற்றும் எதனால் சாப்பிட்ட நேர்ந்தது என்பது குறித்து மற்றொரு மையத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சித்ரா மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மற்ற அங்கன்வாடி பணியாளர்கள், சித்ராவை, ஆட்டோவில் ஏற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வந்தனர். அங்கு சித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்து ஆத்திரமடைந்த மற்ற அங்கன்வாடி பணியாளர்கள் எஸ்ஐஆர் பணிகளை செய்து தர கூறி மிரட்டும் அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டு, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தரக்குறைவாக ஒருமையில் பேசிய ஆணையர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,  தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அங்கன்வாடி பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சித்ரா, தனது கையால், தனது குழந்தைகளுக்கு, என்னுடைய இந்த முடிவுக்கு இந்த நிர்வாகமே காரணம் என ஒன்றரை பக்கத்தில் கடிதம் எழுதி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சித்ரா இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் இதுபோன்ற தற்கொலை முயற்சி மேற்கொண்டது மற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget