மேலும் அறிய

ABP IMPACT: 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த அரிசி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...!

திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது

காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ளது. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உரிய விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகளில் அடைக்கப்படுகிறது.
 
ABP IMPACT: 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த அரிசி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...!
 
இந்த அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமாக திருவாரூர் மற்றும் சுந்தரகோட்டை ஆகிய 2 இடங்களில் நவீன அரிசி ஆலை இயங்கி வந்தது. இதில் திருவாரூர் நவீன அரிசி ஆலை நாள் ஒன்றுக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை கையாளும் உற்பத்தி திறன் கொண்டது. இந்த அரிசி ஆலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மயமாக்கப்பட்ட அரிசி ஆலையாக மாற்றப்பட்டு, இயற்கை எரிவாயு மூலம் செயல்படுத்தும் வகையில் புதிதாக கட்டுமான வசதிகளும் செய்யப்பட்டது.

ABP IMPACT: 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த அரிசி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...!
ஆனால் இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலே மீண்டும் அரவை பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த ஆலையை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அரசின் துரித நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அரிசி ஆலை தற்போது மீண்டும்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ABP IMPACT: 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த அரிசி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...!
 
இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அரவைக்கான நெல் சேமிப்பு தொட்டியில் நெல் கொட்டும் பணியினை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். அதுசமயம் தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் பால பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். ஒரு சில நாட்களில் அரவை பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அரிசி ஆலையில் நூற்றுக்கணக்கான தற்காலிக பணியாளர்கள்  ஆலையில் அரவை நிறுத்தப்பட்ட தன் காரணத்தினால், பணியாற்றிவந்த பணியாளர்களும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். தற்பொழுது ஆலை திறக்கப்பட்டதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு மீண்டும் ஆலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget