மேலும் அறிய

வாராரு..வாராரு..விநாயகர் வாராரு...நாகையில் வலம் வந்த 32 அடி உயர அத்தி விநாயகர்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம்

இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் நாகையில் நடைபெற்றது. தப்பட்டம், மயிலாட்டம், கதகளி, காளி நடனம் என நாகையில் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டியது.
 
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஷ்வ ரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில் , 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
 

வாராரு..வாராரு..விநாயகர் வாராரு...நாகையில் வலம் வந்த  32 அடி உயர அத்தி விநாயகர்..!
 
 
விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது. 32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்பி ஜவஹர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

 
 
நாகை மாவட்டத்தில் கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு
 

வாராரு..வாராரு..விநாயகர் வாராரு...நாகையில் வலம் வந்த  32 அடி உயர அத்தி விநாயகர்..!
 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. மாலையில் இருந்து மழை விட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீவலூர், மேலப்பிடாகை, திருக்குவளை, காக்காளனி, விழுந்தமாவடி பிரதாம ராமபுரம், செருதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடி அத்தி மரத்திலான விநாயகர் நகர்வலம் நாகையிலிருந்து நாகூர் வரை சென்றது இதன் காரணமாக நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்துள்ளதால் விடுமுறை குறித்து மாணவர்கள் அறியாத நிலை ஏற்பட்டதால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வந்து மீண்டும் நனைந்தபடியே செல்கின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
Embed widget