மேலும் அறிய

கனமழையால் திருவாரூரில் 1,403 வீடுகள் இடிந்துள்ளன - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

கனமழையின் காரணமாக இதுவரை கூரைவீடுகளை பொறுத்தவரை 1287 வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும், ஓட்டு வீடுகளை பொறுத்தவரை 182 வீடுகள் பகுதியாகவும் சேதம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கனமழை காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் உள்ள நிவாரண முகாம் மற்றும் நன்னிலம் வட்டம் வாஞ்சியாற்றின் கரை பகுதி ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நேரில் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் தெரிவித்ததாவது,

கனமழையால் திருவாரூரில் 1,403 வீடுகள் இடிந்துள்ளன - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
 
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை கூரைவீடுகளை பொறுத்தவரை 1287 வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும், ஓட்டு வீடுகளை பொறுத்தவரை 182 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. அதேபோல் கால்நடை இறப்புகளை பொறுத்தவரை 56 பசுமாடுகள், 1 எருமை மாடு, 28 கன்றுகள், 61 ஆடுகள் என மொத்தம் 146 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. நிவாரண முகாம்களை பொறுத்தவரை திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப ஆரம்ப பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கபட்டு 28 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
 
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும். கால்நடை இறப்பிற்கான பிரேத பரிசோதனை அறிக்கையை காலத்துடன் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஐநூற்று பிள்ளையார்கோவில் தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியினை பார்வையிட்டனர். பின்னர் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நல  ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டு வருகிறதா என்பதை கேட்டறிந்தனர்.

கனமழையால் திருவாரூரில் 1,403 வீடுகள் இடிந்துள்ளன - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
 
தொடர்ச்சியாக நன்னிலம் வட்டம் குருங்குளம் வாஞ்சியாற்றின் கரை பகுதி பலப்படுத்தப்பட்டு உள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களும் பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், பொது பணித்துறை கட்டிட பராமரிப்பு மோகனசுந்தரம், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget