மேலும் அறிய

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. நடுரோட்டில் கொலை செய்த செங்கோட்டையன்.. அதிர்ந்த ஈரோடு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சொத்து தகராறில் மனைவியைக் கொலை செய்தததாக செங்கோட்டையன் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1995ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. எனினும் விஜயாவை விட்டு விட்டு செங்கோட்டையன் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். இப்படியான நிலையில் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு பெருந்துறையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு விஜயா வழக்கு போட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. 

அப்போது விஜயாவுக்கு ரூ.3.81 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், மாதம் ரூ.4,500 வழங்க வேண்டும் எனவும் செங்கோட்டையனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்பதால் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன்.  அப்போது ஒரே முறையாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என விஜயாவின் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள தனது 55 சென்ட் நிலத்தை விற்பனை செய்து பணத்தை செங்கோட்டையன் தயார் செய்து வந்துள்ளார். ஆனால் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என விஜயா முறையிட்டுள்ளார். 

இதனையறிந்த செங்கோட்டையன் விஜயா மீது கடும் கோபம் கொண்டார். அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி டிசம்பர் 7ம் தேதி மதியம் காஞ்சிக்கோவில் சாலையில் விஜயா நடந்து சென்ற நிலையில் அவரை செங்கோட்டையன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டையன் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம் 

கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தனது உறவினருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் கொலை செய்து அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் துரோகத்தின் சம்பளம் மரணம் என பதிவேற்றம் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி ஸ்ரீபிரியாவை கொலை செய்து அப்படி பதிவிட்டிருந்தார். கணவரை பிரிந்து கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த ஸ்ரீபிரியா, உறவினருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை கண்டு ஆத்திரத்தில் பாலமுருகன் இச்செயலை செய்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
Embed widget