மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Tnusrb: சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரி ஏன்? ரத்து செய்க- அன்புமணி

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரியை நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, அதை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆணையத்தின் தலைவர்தான் பொறுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு ஆணையத்தின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அத்தகைய சூழலில், ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பணியில் இருக்கும் அதிகாரியாக இருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்வது, அவர் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிக்கு எந்தவித பொறுப்புடைமையும் கிடையாது. பொறுப்புடைமையை நிர்ணயிக்க முடியாத அதிகாரி ஒருவரை இந்த பதவியில் எப்படி நியமிக்க முடியும்?

சீருடைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் அளவுக்கு தமிழக காவல்துறையில் பொறுப்பான அதிகாரிகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை. தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மத்திய அரசுப் பதவிகளில் உள்ளவர்கள் தவிர, தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி நிலையில் உள்ள பல அதிகாரிகளுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை.

ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டிய தேவை என்ன?

அவர்களில் பலர் காவல் ஆய்வாளர் அல்லது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் வகிக்கக் கூடிய கண்காணிப்பு அதிகாரி என்ற பணியில் மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பணியை வழங்குவதை விடுத்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டிய தேவை என்ன?

அதைவிட குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செய்தி, சுனில்குமாரை இந்தப் பதவியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே அந்த பதவியில் இருந்த சீமா அமர்வால் என்ற டி.ஜி.பி. நிலையிலிருந்த பெண் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்ததுதான். சீமா அகர்வால் டி.ஜி.பி. நிலையிலான அதிகாரி. காவல்துறையில் அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர். அவரை இடமாற்றம் செய்வதற்கு எந்த தேவையும் இல்லை.

இத்தனை சமரசங்கள் ஏன்?

ஆனால், அவரை இடமாற்றம் செய்தது மட்டுமின்றி, டி.ஜி.பி நிலையிலான பதவியில் அமர்த்துவதற்கு மாறாக சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி. என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இ.கா.ப. அதிகாரி ஒருவருக்கு பதவி வழங்குவதற்காக இத்தனை சமரசங்களையும், வளைப்புகளையும் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுனில்குமார், காவல்துறை பணியில் இருக்கும்போது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினுக்கும், வெளிநாடுகளில் அவருக்காக முதலீடு செய்ததாக கூறப்படும் தொழிலதிபர் ஒருவருக்கும் பாலமாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு சுனில்குமார் மீது உண்டு. அந்த அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, சுனில்குமாருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.

அதற்கு நன்றிக்கடனாகவே சுனில்குமாருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றிக் கடனுக்காக பதவிகளை வழங்க அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல. இது தவறான முன்னுதாரமான அமைந்துவிடும். இதை உணர்ந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?
Pudukkottai plane Accident | சாலையில் தரையிறங்கிய விமானம்புதுக்கோட்டையில் பரபரப்பு விமானி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
Bihar Election Result: அசுர பலத்தில் நிதிஷ்குமார், சிராக்! தலைகீழாக மாறிய ரிசல்ட்! பீகார் தேர்தலில் ட்விஸ்ட்!
பீகார் தேர்தல் எதிரொலி! தமிழகத்திலும் பாஜக சதி? ரவிக்குமார் ரியாக்ஷன் !
பீகார் தேர்தல் எதிரொலி! தமிழகத்திலும் பாஜக சதி? ரவிக்குமார் ரியாக்ஷன் !
Bihar Election Result: முதலமைச்சர் வேட்பாளருக்கே இந்த நிலையா? தேய்ந்துபோகும் தேஜஸ்வி யாதவ்- பின்னடைவு
Bihar Election Result: முதலமைச்சர் வேட்பாளருக்கே இந்த நிலையா? தேய்ந்துபோகும் தேஜஸ்வி யாதவ்- பின்னடைவு
ஆள விடுங்கடா சாமி..ரஜினி தரப்பில் எகிறிய டிமாண்ட்...தெறித்து ஓடிய சுந்தர் சி
ஆள விடுங்கடா சாமி..ரஜினி தரப்பில் எகிறிய டிமாண்ட்...தெறித்து ஓடிய சுந்தர் சி
Embed widget