மேலும் அறிய

’நாய்களுக்கும் பசி இருக்கும்ல’ உணவு தரும் உன்னதர்கள்..!

பசி என்பது பொது. எல்லா உயிர்களுக்குமானது. மனிதர்கள் தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக்கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மற்ற உயிரினங்களோ அவற்றை தேடி அலைய வேண்டியிருக்கிறது. இந்த ஊரடங்கில் தெருவில் வீசப்படும் உணவுகள் கூட கிடைக்காமல் பசியில் வாடிக் கிடக்கின்றன தெருநாய்கள்.

கொரோனா என்ற ஒற்றை சொல் பல உலக நாடுகளை திணற வைத்தது மட்டுமின்றி பலரின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வினை மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்க கடந்த ஆண்டு முதல் மாதக்கணக்கில் நீண்டுகொண்டிருந்நத ஊரடங்கின் காரணமாக, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் உழைத்து தங்களது வாழ்வினை நடத்தியவர்கள் செய்வதறியமால் திகைத்து வருகின்றனர். ஒரு நாள் பொழுதினை கழிப்பதை கூட ஒரு யுகமாக மாற்றிவிட்ட கொரோனா, ஊரடங்கில் அனைவரின் மனதிலும் இருந்த மனிதாபிமானத்தை துளிர்க்க வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகள் அறிவித்தாலும் அவை போதுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். பல இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். கொரோனா காலத்திலும் இப்படியான தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

’நாய்களுக்கும் பசி இருக்கும்ல’ உணவு தரும் உன்னதர்கள்..!
இந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த வின்மீன் அறக்கட்டளையை சேர்ந்த பாலா தனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் நண்பர்களோடு இணைந்து கடைகள் மூடப்பட்டதால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்காக தினமும் 10 கிலோ அரிசி, முட்டையுடன் உணவு தயார் செய்து தனது நண்பர்களுடன் தூத்துக்குடி நகர் பகுதிக்குள் தெரு தெருவாக சென்று உணவளித்து வருகின்றார். இதனுடன் தினமும் 60 முட்டைகளை அவித்து அதனை கலவையாக செய்து தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தங்களது நண்பர்களோடு இணைந்து இருச்சக்கர வாகனத்தில் தூத்துக்குடி வட்டகோவில், பாளை ரோடு, அண்ணாநகர், கடற்கரை சாலை என சுற்றி வரும் இவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.முதல் நாளில் உணவளிக்க செல்லும் போது தெருவோர நாய்கள் இவர்களை கண்டதும் குலைக்க துவங்கி உள்ளது. இதனை தொடர்ந்து மறுதினம் முதல் நன்றியுள்ள ஜீவன்கள் தங்களை எதிர்பார்த்து நிற்பது மனதை வருடுவதாக கூறுகிறார் வின்மீன் அறக்கட்டளை பாலா..

’நாய்களுக்கும் பசி இருக்கும்ல’ உணவு தரும் உன்னதர்கள்..!
 
இதற்காக தனது நண்பர்கள் , சமூக ஆர்வலர்கள் , நல்லோர்கள் உதவி அளித்து வருவதாக கூறும் அவர், கொரோனா காலத்திற்கு பின்னரும் நன்றியுள்ள இந்த ஜீவன்களுக்கு தொடர்ந்து உணவு அளிக்க வேண்டும் என்பது தங்களது ஆசை என்கிறார். மனிதாபிமானம் கொண்டவர்கள் இந்த ஊரடங்கில் உணவிற்கு சுற்றித் திரியும் உங்கள் தெருக்களில் உள்ள நாய்களில் உங்களால் முடிந்த உணவுகளை அளித்து அதன் பசிப்பிணியை போக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget