மேலும் அறிய

தமிழகத்தை உலுக்கிய மரக்காணம் கலவரம் ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி... 20 பேரின் நிலை என்ன தெரியுமா ?

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 20 பேரை விடுதலை செய்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.

விழுப்புரம் : கடந்த 13ஆம் ஆண்டு மரக்காணம் கலவர வழக்கில் 20 பேரை விடுதலை செய்து விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவு.

மரக்காணம் கலவர வழக்கு 

கடந்த 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெற்றது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பா.ம.க-வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மரக்காணம் வழியே சென்றபோது, அவர்களுக்கும் பட்டியலின சமூக மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
 
இது தொடர்பான வழக்கில் திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடிந்து குற்றம்சாட்ட பட்ட தலித் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இக்கலவரம் தொடர்பாக சுமார் 200 பா.ம.க-வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில் சுமார் 166 பேர் விடுவிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், மாணிக்கம், கலையரசன், குமரன் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 
தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரம் தொடர்பான வழக்கு, திண்டிவனம் நீதிமன்றத்தில் 2-வது கூடுதல் அமர்வு முன்பு 12 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அந்த 34 பேரில் இருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டு, 20 நபர்கள் மீது மட்டும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து (22.04.2022) அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரக்காணம் கலவரம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 20 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.
 
இந்த கலவரத்தில் கடலூர் மாவட்டம் வல்லம்படுகையை சார்ந்த பாமக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சங்கர், குமார், சுப்பிரமணி, சுதாகர், ஆனந்த், ராமதாஸ், செழியன் சண்முகம், ராஜசேகர், சின்னதம்பி, ராஜாராம், உள்ளிட்ட 34 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இருபது பேரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.
 
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 34 பேரில்ஏற்கனவே 14பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 20 பேரை விடுதலை செய்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget