மேலும் அறிய

தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பகுதிகளில் 102 ஆய்வு கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு விண்ணப்பம்

நாகையை உள்ளடக்கிய தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும், ஹைட்ரோகார்பன் எடுக்க பல்வேறு கட்டங்களாக ஏலம் விட்டுள்ளது. இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதியை உள்ளடக்கிய தரை மற்றும் கடலோர பகுதிகளில்  ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது.


தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

இவை அனைத்தும் கடலோர தரைப் பகுதி மற்றும், ஆழ் கடலற்ற  கடல் பகுதி ஆகும்.  இவற்றில் பணிகளைத் தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கடந்த 2019 ஆம் ஆண்டில்  விண்ணப்பித்து இருந்தது. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதுபோன்ற சுற்றுச்சூழல் அனுமதிகளை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனமானது, தான் ஏலம் எடுத்துள்ள பகுதிகளில் நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் 102 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடந்த 5ம் தேதி விண்ணப்பித்துள்ளது.


தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: வேதாந்தா நிறுவனம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, தான் ஏலம் எடுத்துள்ள தரைபகுதிகளை தவிர்த்துவிட்டு கடல் பகுதிக்கு மட்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதன் நோக்கம், எப்படியாவது கருத்து கேட்பு இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகம், பாண்டிச்சேரி உள்ளடக்கிய ஆழ்கடலற்ற  பகுதியில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு அனுமதி கொடுத்தால், ஷேல் எண்ணெய்  உள்ளடக்கிய  அனைத்தையும் ஹைட்ரோ பிராக்கிங்  முறை மூலமாகவே வெளிக்கொணர வாய்ப்புள்ளது. இதனால், கடலில் உள்ள மீன் வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தீவிர பரிசீலனை செய்து நிராகரித்ததை போன்று வேதாந்தா நிறுவனத்தின்  விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து புதிய எண்ணெய் கிணறு உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் அனுமதி கிடையாது என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் வேதாந்தா நிறுவனம் தற்போது அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பது விவசாயிகளை பாதிக்கக்கூடிய செயலில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடுகிறது ஆகவே அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உடனடியாக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget