மேலும் அறிய

தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பகுதிகளில் 102 ஆய்வு கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு விண்ணப்பம்

நாகையை உள்ளடக்கிய தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும், ஹைட்ரோகார்பன் எடுக்க பல்வேறு கட்டங்களாக ஏலம் விட்டுள்ளது. இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதியை உள்ளடக்கிய தரை மற்றும் கடலோர பகுதிகளில்  ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது.


தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

இவை அனைத்தும் கடலோர தரைப் பகுதி மற்றும், ஆழ் கடலற்ற  கடல் பகுதி ஆகும்.  இவற்றில் பணிகளைத் தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கடந்த 2019 ஆம் ஆண்டில்  விண்ணப்பித்து இருந்தது. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதுபோன்ற சுற்றுச்சூழல் அனுமதிகளை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனமானது, தான் ஏலம் எடுத்துள்ள பகுதிகளில் நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் 102 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடந்த 5ம் தேதி விண்ணப்பித்துள்ளது.


தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: வேதாந்தா நிறுவனம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, தான் ஏலம் எடுத்துள்ள தரைபகுதிகளை தவிர்த்துவிட்டு கடல் பகுதிக்கு மட்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதன் நோக்கம், எப்படியாவது கருத்து கேட்பு இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகம், பாண்டிச்சேரி உள்ளடக்கிய ஆழ்கடலற்ற  பகுதியில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு அனுமதி கொடுத்தால், ஷேல் எண்ணெய்  உள்ளடக்கிய  அனைத்தையும் ஹைட்ரோ பிராக்கிங்  முறை மூலமாகவே வெளிக்கொணர வாய்ப்புள்ளது. இதனால், கடலில் உள்ள மீன் வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தீவிர பரிசீலனை செய்து நிராகரித்ததை போன்று வேதாந்தா நிறுவனத்தின்  விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து புதிய எண்ணெய் கிணறு உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் அனுமதி கிடையாது என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் வேதாந்தா நிறுவனம் தற்போது அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பது விவசாயிகளை பாதிக்கக்கூடிய செயலில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடுகிறது ஆகவே அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உடனடியாக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
CSK vs SRH LIVE Score: சி.எஸ்.கேவின் அதிரடி பேட்டிங்; திணறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
Embed widget