மேலும் அறிய

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, குறைவான விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை' - வானதி சீனிவாசன்

"உண்மைகளை எல்லாம் நேரடியாக அனுபவித்து வரும் பொதுமக்கள் நன்கறிவார்கள். அதனால்தான், எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளை நம்பாமல், மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர்த்த இருக்கிறார்கள்”

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி சிலிண்டர் 900 ரூபாய்க்கு கிடைக்கும். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'உஜ்வாலா' திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டரின் விலை 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இனி 700 ரூபாய்க்கு சிலிண்டர் பெற முடியும். இதனால் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பயன் பெறுவார்கள். இதற்காக பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நேரடி பலனைக் கொடுக்கும் சமையல் எரிவாயு விலை குறைப்பை எதிர்க்கட்சிகள் வழக்கம் போல, விமர்சனம் செய்து வருகின்றன. அவர்களது அறிக்கை, பேச்சு, பேட்டிகளிலும், சமூக ஊடகப் பதிவுகளில், மக்களுக்கு பயன் கிடைத்து விட்டதே, பிரதமர் மோடி அரசுக்கு குறையாமல் இருக்கும் மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்து விடுமே என்கிற அச்சமும், பதற்றமும் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளில், 2014-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியை விட்டு வெளியேறும் போது, சமையல் எரிவாயு விலை குறைவாக இருந்தது போலவும், பாஜக ஆட்சியில் தான் அது அதிகரித்தது போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், உண்மை அதற்கு நேர் மாறானது. 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில், 14.2 கிலோ எடை கொண்ட, சமையல் எரிவாயு விலை சிலிண்டரின் விலை சென்னையில் 1,234 ரூபாயாக இருந்தது. கொல்கத்தாவில் 1,270 ரூபாயாக  இருந்தது. பாஜக ஆட்சியில் 2023 மார்ச் 1-ம் தேதி 1,118 ரூபாய் 50 பைசாவாக இருந்தது. 2020 மே 1- ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 569 ரூபாய் 50 பைசா ஆக இருந்தது. அதாவது 2014-ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, கிட்டத்தட்ட பாதி விலைக்கு விற்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தது விட குறைவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு இதைவிட நற்சான்று இருக்க முடியாது.

இந்த புள்ளிவிவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://iocl.com/indane-14Kg-nonsubsid-previous-price இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 2014-ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, 14 கோடியே 50 லட்சம் மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தனர். பாஜக ஆட்சியில் அந்த எண்ணிக்கை 33 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாய் இணைப்பு பெற்றவர்கள் 9 கோடியே 60 லட்சம் பேர். சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 200 ரூபாயும், உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் குறைத்தது சாதனை என்றால் அதைவிட பெரும் சாதனை, 14.50 கோடி இணைப்புகளை 33 கோடியாக உயர்த்தியது. இந்த உண்மைகளை எல்லாம், இவற்றை நேரடியாக அனுபவித்து வரும் பொதுமக்கள் நன்கறிவார்கள். அதனால்தான், எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளை நம்பாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர்த்த இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.