![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TTV Dhinakaran: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணையலாம்: சூசகமாக பதிலளித்த டி.டி.வி. தினகரன்
TTV Dhinakaran: வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
![TTV Dhinakaran: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணையலாம்: சூசகமாக பதிலளித்த டி.டி.வி. தினகரன் TTV Dhinakaran Says More Chances to Join with O Pannerselvam in Future TTV Dhinakaran: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணையலாம்: சூசகமாக பதிலளித்த டி.டி.வி. தினகரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/c25525ee294b2729f0748121554589301660131734322224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
TTV Dhinakaran: வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைச் சுற்றியே நகர்ந்துகொண்டு இருக்கிறது. இரண்டு முறை தொடர் வெற்றியைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த அதிமுக, 2021 சட்ட மன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவ முக்கிய காரணமாக அமைந்தது, அதிமுகவின் உட்கட்சி மோதலும், பாஜகவுடனான கூட்டணியும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அதிமுக பொதுக்குழு கட்சியில் இருந்து நீக்கியது. அதற்கு முன்னர் கட்சியில் இருந்துகொண்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், அவரது ஆதரவாலர்களின் மாறுபட்ட நிலைப்பாடு என அதிமுக தொடர்ந்து உட்கட்சி அரசியலில் தமிழக அர்சியல் களம் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது.
அண்மையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓபிஎஸ் இபிஎஸ் பிரிவுகள் மற்றும் இரு பிரிவினரிடையே மோதல், சட்டப்போராட்டம் என தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட அதே மேடையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவளர்களை காட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். இதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பொதுவெளியில் இருவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மோதல் போக்கினையே கடைபிடித்து வந்தனர். அதிமுகவின் ஒற்றை மக்களவை உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமாகிய ரவீந்திரநாத் எம்.பி அவர்களை கட்சியி இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)