Breaking LIVE: விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
Breaking News LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
Breaking News LIVE Updates:
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING News LIVE: மேகதாது அணை - தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகா தீர்மானம்
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு நேற்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலம் முடிவு செய்துள்ளது.





















