மேலும் அறிய

கொடி காத்த குமரன்... நம் குலம் காத்த குமரன்... புத்தகம் தாண்டி போற்றப்பட வேண்டிய போராட்ட தியாகி!

கொடிகாத்த குமரன்.. இப்படித்தான் நம்மில் பலருக்கும் திருப்பூர் குமரனைத் தெரியும். பலருக்கு பெயரவளில் தெரியும், பலருக்கு ஏட்டளவில் தெரியும். ஆனால், உணர்வளவில் போற்றப்பட வேண்டிய மாமனிதர் அவர். 

கொடிகாத்த குமரன்.. இப்படித்தான் நம்மில் பலருக்கும் திருப்பூர் குமரனைத் தெரியும். பலருக்கு பெயரவளில் தெரியும், பலருக்கு ஏட்டளவில் தெரியும். ஆனால், உணர்வளவில் போற்றப்பட வேண்டிய மாமனிதர் அவர். 

இன்று அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அவரைப் பற்றி நினைவு கூர்வோமாக. 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் நடந்த விடுதலைப் போராட்டத்தில் தான் குமரன் உயிர் நீத்தார்.

பிறப்பு:

குமரன் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார். இவரது இயற்பெயர், குமாரசாமி. இளமையில் வறுமையால் அவரால் பள்ளிப் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆரம்பப் பள்ளியுடன் கல்வியை முடித்துக் கொண்டார். ஆனால், அவரது அறிவுக்கண் தேச விடுதலைக்கான போராட்டத்தை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சியது. பிழைப்பு நெசவு என இருந்து வந்த அவர் தொழில் தேடி திருப்பூருக்குப் பெயர்ந்தார். அங்குதான் பிழைப்புடன் சேர்ந்து தேசத்துக்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். 

அவர் வழி காந்திய வழி..

குமரனின் சுதந்திர வேட்கை காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டிருந்தது. திருப்பூர் வந்த காந்தியடிகளின் பேச்சைக் கேட்டு அவரது விடுதலை வேட்கை இன்னும் அதிகமானது. அதனால் காந்தியடிகள் அறிவிக்கும் போராட்டங்களை ஒட்டி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றார்.

தேச பக்திப் பாடல்களை பாடினார். தேச பக்தியை ஊக்குவிக்கும் ஓரங்க நாடகங்களை நடத்தினார். திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தார். இவ்வளவு போதாதா? இவர் ஆங்கிலேயரின் கண்களை உறுத்த ஆரம்பித்தார்.

அப்படித்தான் 1932 ஆம் ஆண்டும் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆங்கிலேயர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். எவ்வளவு அடித்தும் தான் ஏந்திய கொடியை விடாமல் பிடித்தவாரே இருந்தார் குமரன். குண்டாந்தடியால் தாக்கப்பட்டதில் மண்டை ஓடு உடைந்து ரத்தம் பெருகியபோதும் அவர் தேசப்பற்றைவிடவில்லை, கொடியையும் தான்.

சிறை சென்றார், செக்கிழுத்தார். இறுதியில் உயிரையும் விட்டார். ஆம், தலையில் படுகாயங்களுடன் கொடி காத்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இறுதி வரை வந்தே மாதரம் என்ற முழகத்தை மட்டும் அவர் துறக்கவே இல்லை.


கொடி காத்த குமரன்... நம் குலம் காத்த குமரன்... புத்தகம் தாண்டி போற்றப்பட வேண்டிய போராட்ட தியாகி!

தமிழகத்தில் வலுப்பெற்ற சட்ட மறுப்பு இயக்கம்:

1929 ஆம் ஆண்டு நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர கூட்டத்தில் மூவர்ணக் கொடி  ஏற்றப்பட்டு. ‘பூரண சுயராஜ்யமே  இந்திய தேசிய காங்கிரசின் குறிக்கோள்’ என பிரகடனப்படுத்தப்பட்டது. 1930 ஜனவரி 2ஆம் நாள் கூடிய காங்கிரஸ் செயற்குழு ஜனவரி 26 ஆம் நாளை பூரண சுயராஜ்ய தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. சட்ட மறுப்பு இயக்கத்தை  நடத்திடும்  முழுப் பொறுப்பும்  காந்தியிடம்  வழங்கப் பெற்றது. இதனை திருப்பூரில் தீவிரமாக முன்னெடுத்தார் திருப்பூர் குமரன். அப்படி 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் நடந்த விடுதலைப் போராட்டத்தில் தான் குமரன் உயிர் நீத்தார்.

நேரில் ஆறுதல் சொன்ன காந்தி:

தேசப்பற்று எந்த அளவுக்கு உயர்வானது என்பதற்கு குமரன் சான்றென்றால் அது மிகையல்ல. அதனலேயே குமரன் மறைவிற்குப் பின்னர் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, குமரனின் வீட்டிற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து குமரனின் குடும்பதிற்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. 2004 ஆம் ஆண்டு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது நூறாவது பிறந்த நாளில் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget