மேலும் அறிய

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி ! 4 வழிச்சாலையாக மாறும் திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலை

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம்.

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவக்கி உள்ளது.

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலை

திண்டிவனம் - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ( என்எச் 66 ) போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. குறிப்பாக இச்சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆன்மிக பயணம் செய்கின்றனர். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக பெங்களூர் செல்ல வேண்டும் என்றால், திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரியை கடந்து தான் போக வேண்டும். இதுதான் பிரதான வழி.. ஆனால் இந்த சாலை இருவழிச்சாலையாகவே உள்ளது.
 
இந்தநிலையில், திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவக்கி உள்ளது. திருவண்ணாமலை, மேல்மருவத்துார், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல்; அடிக்கடி விபத்து

இச்சாலை, 183 கி.மீ., நீளம் உடையது. இந்தச் சாலையை இரு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, 2012ல் துவக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின் கடந்த ஆண்டு முடிந்தது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 624 கோடி ரூபாய் செலவிட்டது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய, நங்கிலிகொண்டான், கரியமங்கலம், நாகம்பட்டி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மற்றும் மேல்மருவத்துார் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
 
எனவே, இந்த சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன் வந்துள்ளது. இதேபோல, திண்டுக்கல் - நத்தம் இடையிலான 34 கி.மீ., சாலையும், 270 கோடி ரூபாய் செலவில் இரு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இரண்டு சாலைகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிறுவனம், அடுத்த மாதம் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின், சாலைகள் விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி, நிலங்கள் தேவைப்படும் என்ற விபரம் தெரியவரும். இந்த சாலை விரிவாக்கம் மூலம் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget