மேலும் அறிய

தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகள் ரத்து - 22ஆம் தேதி ஒருநாள் மட்டும் விழா நடத்த முடிவு

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் இந்த வருட ஆராதனை விழாவினை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த தினமான ஜனவரி 22 ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது

847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை  எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.  இங்கு ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாக பிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்து வழக்கம்.

அதன் படி சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆவது வருட ஆராதனை விழாவினை, விழாக் குழுவினர், வரும் ஜனவரி  மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மிக வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா, ஓமைக்ரான் வைரஸ் தொற்று நோயை கருத்தில் கொண்டும், விழாவில் கலந்து கொள்ளும் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் நலனை உறுதி செய்யும் வகையிலும், விழா ஏற்பாடுகள் சபையின் தலைவரால், விழாக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. 


தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகள் ரத்து - 22ஆம் தேதி ஒருநாள் மட்டும் விழா நடத்த முடிவு

அதனடிப்படையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் இந்த வருட ஆராதனை விழாவினை சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 22 ஆம் தேதி அன்று காலை வழக்கம்போல் உஞ்சவிருத்தியும், பின்னர் விழாப்பந்தலில் நாதஸ்வர கச்சேரியும், அதன் பின்னர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான இசைக்கலைஞர்களை கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனையுடன் கூடிய இசை அஞ்சலியுடன் இவ்வருட ஆராதனை விழா நிறைவு பெறும். மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி விழா பந்தலுக்குள் 100 நபருக்கு மேல் அனுமதியில்லை என்பதால் விழாவின் போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகள் ரத்து - 22ஆம் தேதி ஒருநாள் மட்டும் விழா நடத்த முடிவு

சபையின் புரவலர்கள், நலன்விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும்  இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.   பொது மக்கள், இசைகலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக வாதிகளின் நலனில் அக்கரை கொண்டு இப்படி எடுக்கப்பட்ட இந்த முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் எப்போதும் போல் தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என திருவையாறு ஸ்ரீ தியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
"சென்னை நகரமா? மக்களின் நேரத்தை விழுங்கும் நரகமா?" - டிராஃபிக் ஜாமில் தவிக்கும் சென்னை குறித்து வேல்முருகன் சீற்றம்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
Embed widget