மேலும் அறிய

Thevar Jayanthi: ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசப்படவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடி..!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனிடையே இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன்  அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "தேவர் திருமகனார் என அறிஞர் அண்ணா அவரை அன்போடு அழைக்க தொடங்கினார். எல்லா கட்சிகளும் தலைவர், தொண்டர் என வலம் வரும் இந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம்  மட்டும் அண்ணன், தம்பிகள் என்ற பாசத்தோடு கட்சி நடத்துகிறீர்கள் என்ற ஆச்சரியத்தோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள், எஸ்.எஸ்.தென்னரசு அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். 1963 ஆம் ஆண்டு தேவர் மறைவு நேரத்தில் அண்ணா, கலைஞர் கருணாநிதி இருவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 1969 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்கு வந்து அவருடைய நினைவிடத்தை பார்வையிட்டு தேவையான அரசு உதவிகளை கருணாநிதி முதலமைச்சராக இருந்த நேரத்தில் செய்தார். 

2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்து தந்ததும், தேவர் வாழ்ந்த இல்லத்தை ரூ.10 லட்சம் செலவில் புதுப்பித்ததும், ரூ.9 லட்சம் செலவில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் புகைப்பட கண்காட்சி, ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சம் மதிப்பில் முடி இறக்கும் இடம், ரூ.5 லட்சம் செலவில் பால்குடம் எடுக்கும் இடம், ரூ.5 லட்சம் செலவில் முளைப்பாரி எடுக்கும் இடம் அனைத்தும் கலைஞர் கருணாநிதி செய்து கொடுத்தார். 

மதுரையில் கம்பீரமாக உள்ள தேவர் சிலை திறப்பு விழாவை அரசு விழாவாக நடத்தி அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார். மேம்பாலம், அறக்கட்டளை ஆகியவற்றிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டினார். கமுதி, முசிறி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் தேவர் பெயரில் கல்லூரி அமைத்ததும் கலைஞர் கருணாநிதி தான். இரு தினங்கள் முன்பு கூட  முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முத்துராமலிங்க தேவர் வீரராக பிறந்தார், வாழ்ந்தார், மறைந்தார், இன்றைக்கும் போற்றப்படுகிறார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் “ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், “சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்பது தான் திராவிடம். இந்த உண்மையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகை பாஜக கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளது. ” என குறிப்பிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.