மேலும் அறிய
Tamilnadu Roundup: எதிர்பார்ப்பில் தவெக பொதுக்குழு, அன்பில் மகேஷ் கடிதம், பிரபு மனு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அடுத்த திருவான்மியூரில் நடைபெற உள்ளது
- "வேண்டுமென்றே சில விஷமிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. தவெகவில் நான் சாதாரண தொண்டன்" - வருங்கால முதல்வர் ஆனந்த் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தகட்டமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
- சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடிய நடிகர் பிரபு
- இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தங்களின் பிள்ளைகளை வாழ்த்தி அனுப்பி வைத்த பெற்றோர்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக, 4 கவுன்சிலர்கள் நீக்கம் - நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
- உகாதி மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோசம்! ரூ. 10 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பு!
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன
- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் திமுக ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டடங்கள் குறித்து, அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம்
- ஒருவரின் அழுகையையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் T.G. தியாகராஜன்
- கோவை: மதுக்கரையை அடுத்த முருகன்பதி அருகே, தங்கராஜ் என்ற விவசாயியின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை, நேற்றிரவு சிறுத்தை தாக்கிக் கொன்ற நிலையில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது
- மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை நிகழ்வுகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிப்பு
- தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் மீட்புக் கழகம் என்ற அமைப்பின் தலைவரான செந்தில் கைது
- அண்ணா சாலை பகுதிகளில் பைக் ரேஸ் - 35 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion