Tamilnadu Assembly LIVE | தொடங்கியது 16-வது சட்டமன்ற கூட்டத்தொடர் : தமிழகத்தின் நிதிநிலை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். காலை வணக்கம் என்று ஆளுநர் தனது உரையை தமிழில் தொடங்கினார். பின்னர், எளிமையாக வாழுங்கள் என்றும், தமிழ் மிகவும் இனிமையான மொழி என்றும் கூறினார்.

Background
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவை செயலாளர் அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். காலை வணக்கம் என்று ஆளுநர் தனது உரையை தமிழில் தொடங்கினார். பின்னர், எளிமையாக வாழுங்கள் என்றும், தமிழ் மிகவும் இனிமையான மொழி என்றும் கூறினார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் - ஆளுநர் உரை
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் - ஆளுநர் உரை
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு இருக்கும் - ஆளுநர் உரை
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு இருக்கும் - ஆளுநர் உரை





















