மேலும் அறிய

இனிமே இவங்க பாத்துப்பாங்க..! 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அதிகாரிகள்:

தமிழக அரசால் நியமிக்கப்படும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள், அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, டிட்கோ நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வுத் துறைகளை சேர்ந்த பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வர். அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது மற்றும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும் கண்காணிப்பர். மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னையை தவிர்த்த 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதைதொடர்ந்து தற்போது, மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்?

தலைமை செயலாளரின் அறிக்கையின்படி, அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த அதிகாரிகள்;

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு  மனிதவள மேலாண்மைத்துறை செயலர் நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர்  ஷில்பா பிரபாகர் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று,  சேலம் மாவட்டத்திற்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக  இயக்குநர்  சங்கரும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும், திருப்பூர் மாவட்டத்திற்கு டான்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமாரும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அரியலூர் மாவட்டத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் அருள்ராஜ், கோவை மாவட்டத்திற்கு சிப்கோ நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு லலித் யாதவ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் செந்தில் குமார், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நாமக்கல் மாவட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர்  குமரகுருபன் ஆகியோரை, மாவட்ட வாரியான கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

”எல்லாருக்கும் எல்லாமும்”

அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான மற்றும் சமமான வளர்ச்சி, அனைத்து பகுதி மக்களுக்கும்  தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் கண்காணிக்கவும்  தான், மாவட்ட வாரியாக இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget