மேலும் அறிய

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்கேநகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 18 புதிய பேருந்து நிலையங்கள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு  ஆய்வு செய்தார்.

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம்:

முன்னதாக பெரியார் நகரில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. முதலமைச்சர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி புரிகிற வகையில் அரசின் சார்பில் பயன்படுத்துகின்ற பெரியதுறையாக போக்குவரத்து துறை உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தற்போது விழா காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையம் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு இன்று செயல்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் கடந்த காலத்தில் துவங்கப்பட்டிருந்தாலும் அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல்  இல்லாததால் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளை கேட்டு அறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி தொடர்ந்து வருகின்ற காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணி முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு சொன்ன சூப்பர் தகவல்:

ஆம்னி பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்ற திட்டமிட்டு 42 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் 95 சதவீத பணிகள் நிறைவுற்று உள்ளது கூடிய விரைவில் தமிழக முதல்வர் அவர்களால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலங்களில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி தொடர் ஆய்வினை மேற்கொண்டு பயணிகளின் தேவைக்கிற்காக பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மார்ச் மாதத்தில் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்கேநகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளோடு பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தொகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாமல்லபுரத்தில் ஒரு பேருந்து நிலையம், செங்கல்பட்டில் ஒரு பேருந்து நிலையம் புதிய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, 18 புதிய பேருந்துகள் கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2025 டிசம்பருக்குள் 18 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும். உலக தரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது என்று விமர்சனம் செய்தவர்கள் கூட தற்பொழுது புகழ்ந்து பேசுகிறார்கள்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget