மேலும் அறிய

Marudhamalai Murugan: திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியா? ரூ.146.83 கோடி பட்ஜெட்டில் முக்கிய திட்டம் - பக்தர்கள் குஷி

Marudhamalai Murugan Statue: உலகின் உயரமான முருகன் சிலையை மருதமலையில் நிறுவ உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Marudhamalai Murugan Statue: மருதமலையில் முருகன் சிலையை நிறுவ இந்து சமய அறநிலையத்துறை 146 கோடியே 83 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

உலகின் உயரமான முருகன் சிலை:

வாக்களித்தவர்களுக்கானதாக மட்டுமின்றி வாக்காளிக்காதவர்களுக்கும் சேர்த்து, தனது தலைமையிலான அரசு உழைத்து வருவதாக முதலமைச்சர் பேசி வருகிறார். அதன்படி, முற்போக்கு சித்தாங்களை கொண்ட திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை இதுவரை இல்லாத பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான், ஆதரவையும் எதிர்ப்பையும் பெறும் வகையில் முருகப்பெருமானுக்கு மூன்று சிலைகள்  அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, இந்துசமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார்.  இதில் கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் 184 அடி உயரத்தில், அதவாது உலகின் மிக உயரமான முருகன் சிலையை அமைக்கும் அறிவிப்புமடங்கும்.  இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.146.83 கோடியாக இருக்கும், மருதமலை சிலைக்கு மட்டும் ரூ.110 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ”கடவுள் சிலை”

மலேசியாவின் பட்டு குகைளில் உள்ள 140 அடி உயர சிலை தான், உலகின் உயரமான முருகன் சிலை என்ற பெருமையை நீண்ட காலமாக கொண்டிருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆணுட் ஏப்ரல் மாதம்  சேலம் மாவட்டம் ஏதாப்பூரில் உள்ள ஒரு தனியார் கோவிலில் 146 அடி உயர முருகப்பெருமான் சிலை திறக்கப்படது. தற்போது அதுதான் உலகின் மிக உயரமான சிலையாக உள்ளது. இந்நிலையில் தான் மருதமலையில்  'தமிழ் கடவுள்' முருகனின் 184 அடி உயர சிலை அறுகோண வடிவ வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், அதில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மற்ற இரண்டு சிலைகள்:

மருதமலையை தொடர்ந்து 180 அடி உயர இரண்டாவது சிலையானது ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோயிலில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக 6 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் 114 அடி உயர முருகன் சிலையானது ராணிபேட்டை மாவட்டம் குமரகிரியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்பட்டது.

குடமுழுக்கும், நிலம் மீட்டெடுப்பும்:

கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே, இது ஒரு இந்து விரோத ஆட்சி என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதனை திறம்பட கையாண்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை சேகர்பாபு மழுங்கடிக்க செய்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், பழையை கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகங்களை நிகழ்த்துவது, பெண் ஓதுவர்களை ஊக்குவித்தல் மற்றும் கோயில்களில் பிராமணரல்லாத அர்ச்சகர்களை நியமித்தல்  என துறையின் சாதனைகள் நீள்கின்றன. 

எதிர்க்கும் தோழர்கள்:

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு, தோழமை அமைப்புகளிடமிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற முருகப் பெருமானைப் பற்றிய சர்வதேச மாநாட்டின் போது, திராவிடக் கட்சி அதன் பகுத்தறிவு கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தவும், மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதைத் தவிர்க்கவும் சிபிஎம் திமுகவை வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் கந்த சஷ்டி பாராயணம் மற்றும் கல்லூரிகளில் ஆன்மீகப் படிப்புகள் குறித்த தீர்மானங்களுக்கு விசிக பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது துறையின் சாதனைகள் குறித்து "அதிக உற்சாகமாக" இருப்பதை திராவிடர் கழகத் தலைவர் கே.வீரமணி எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையால்  நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே என்று சேகர்பாபு தெளிவுபடுத்தினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget