மேலும் அறிய

TN Governor: ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்.. நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கவில்லையா? ஆளுநர் பரபரப்பு விளக்கம்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆகியோரை சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

ஊழல் வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நேற்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார்.

முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றுகிறாரா ஆளுநர்?

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆகியோரை சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளதாக கடிதத்தில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருந்தார்.

சிபிஐயின் கோரிக்கைக்கு அனுமதி வழங்குமாறு மாநில அமைச்சரவை கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அமைச்சரவையின் கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றும், இதன் காரணமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் ஆளுநருக்கு அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

அதேபோல, அதிமுக ஆட்சி காலத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக பதவி வகித்த கே.சி. வீரமணிக்கு எதிராகவும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தது. அனுமதி வழங்கக் கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. 

ஆளுநர் மாளிகை விளக்கம்:

ஆனால், இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் கூறியிருந்தார். ஊழல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அமைச்சரவை வழங்கிய பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.

பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல, கே.சி. வீரமணிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கை பொறுத்தவரையில், விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநில அரசு சமர்பிக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை சமர்பிக்காத காரணத்தால் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் மாநில அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget