மேலும் அறிய

TN Governor Speech: "இந்தியாவிற்கு அறிமுகம் தேவை.. பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி

அறம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஒரு சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் தமிழ் ஆளுமைகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாடினார். அப்போது, தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய ஆளுநர், “தமிழ் மொழிக்கு இணையான மொழி சமஸ்கிருதத்தை தாண்டி வேறு மொழி ஏதுமில்லை. அறம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஒரு சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை. கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் அல்ல. 

"தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை நான்"

உயிரினம் கஷ்டப்படுவதை பார்த்து கவலை கொள்வதும் ஆன்மீகம் தான். நான் ஆளுநரோ இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டேன். தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்.

தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு எனக்கு தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தெரியாது. இங்கு வந்த பின்னர் திருக்குறள் படிக்க தொடங்கினேன். திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பை படிக்கும்போது, தமிழ் மொழியின் மீது ஆழமான அன்பு ஏற்பட்டது” என்றார்.

தமிழ்மொழி குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் ஆளுநர் ரவி சனாதனம் குறித்து சர்ச்சையாக பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய அவர், சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார்.

"சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு"

அதேபோல, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தமிழ்நாடு புனிதமான நிலம். வளமான நாடு. பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் சனாதன தர்மம்.

இந்த சனாதன தர்மம் துவங்க தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. சனாதனத்தில் தீண்டாமை வலியுறுத்தப்படுவதில்லை. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளாக இது உள்ளது.

1000 ஆண்டுகள் வெளிநாட்டினர் ஆட்சியில் பலர் அதை மறந்து விட்டனர். இது சனாதன நாடு. 1947இல் தான் நாடு உருவானது என்று நினைக்கின்றனர். அது, எனக்கு நகைப்பாக உள்ளது. சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மத்தை பிடித்து காக்கின்ற நிலம் இது. இந்த நிலத்தில் பிறந்ததால் அரவிந்தர் ரிஷி அரவிந்தரானார்" என்றார்.

கடந்த ஜனவரி மாதம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, "இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget