மேலும் அறிய

மோடி ஆட்சியில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து விட்டன - எல்.முருகன்

கடந்த பத்து ஆண்டுகளில் 245 மீனவர்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் 2014க்குப் பிறகு எல்லையில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து விட்டன என மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.        

மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முறையாக எல்.முருகன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில்," மீனவர்களின் நலன்கள் காக்கும் வகையில் மத்திய அரசு  செயல்படும். பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் எல்லைப் பகுதிகளில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் ஜீரோவாக குறைந்து விட்டது. எனவே, மீன்வளங்களை  நீடித்திருக்கச் செய்வது, மீன்பிடித் தொழில் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

கச்சத்தீவு மீட்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், " கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான். இதுகுறித்து, பின்னர் விரிவாக பேசலாம். இன்று தான் பணியைத் தொண்டங்கியிருக்கிறேன்" என்று தெரிவித்தார். 

தரவுகள் கூறுவது என்ன?  

1991 முதல் 2011 வரை இலங்கை கடற்படையினரால்,தமிழக மீனவர்கள் 83 பேர் கொல்லப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பதில்மனுவில் தமிழ்நாடு அரசு  தெரிவித்தது. கடந்த பத்து ஆண்டுகளில் 245 மீனவர்கள், இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக, 2021 பிப்ரவரி மாதம் அதிமுக எம்.பி தம்பிதுரை மாநிலங்களவையில் தெரிவித்தார். கடலில் கொல்லப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை மட்டுமே இதுவாகும். காயமடைந்தவர்கள் நிலைமை குறித்த தரவுகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 1983 முதல் இதுநாள் வரை 500க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொலலப்பட்டிருக்கலாம் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   

இந்தாண்டு தொடக்கத்தில், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தினர். 

அண்டை நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவரம்  

நாடு

சிறையில் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை 

பாகிஸ்தான் 

270 

வங்கதேசம் 

61

இலங்கை 

0

ஈரான் 

09

 

முன்னதாக, மதிமுக பொதுச் செயலலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், 2019ல் 210, 202௦ல் 74 மீனவர்கள் இலங்கை கடற்படையால்  சிறைப்பிடிக்கப்பட்டனர். அரசின் தொடர் முயற்சிகளால்  அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்" எனத் தெரிவித்தது.  

தமிழ்நாடு மீனவர்களின் 62 படகுகளை இலங்கை கடற்படை சிறைபடித்து வைத்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு  மத்திய அரசு தெரிரிவித்தது.       

மேலும், வாசிக்க: 

Union Minister L. Murugan: வழக்கறிஞர் டூ மத்திய அமைச்சர்.. எல்.முருகன் கடந்து வந்த பாதை! 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget