மேலும் அறிய

Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!

”கள்ளச்சாரய விவகாரத்தில் தொடர்புடையாவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்த நிலையில், பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு”

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இந்த செய்தியை எழுதும் வரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளது.

இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் - முதல்வர்

கள்ளச்சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிரடி சோதனை செய்ய அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் / மாநகர கமிஷனர்கள் என அனைத்து போலீசாருக்கும் தமிழக உள்துறையில் இருந்து ஆர்டர் பறந்துள்ளது.

களத்தில் நேரடியாக இறங்கிய டிஜிபி

அதே நேரத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் அனைத்து மாவட்ட போலீசார், ஆணையர்களுக்கு இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள், மது விற்பவர்கள் என ஒருவர் கூட விடாமல் பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை டிஜிபி தலைமையில் உயர் அதிகாரிகள், எஸ்.பிகளின் கூட்டம் காணொளியில் நடந்துள்ளது அதில்தான் டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதிரடி சோதனையை தொடங்கிய புதுகை எஸ்.பி.

டிஜிபியின் உத்தரவை அடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்த தன்னுடைய மாவட்ட காவல்துறைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறார் புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே. மற்ற மாவட்ட எஸ்.பிக்களும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 24 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 24 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறது திருவாரூர் மாவாட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அங்கு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

யார் தவறு செய்திருந்தாலும், அவர் எந்த கட்சியை சேர்தவராக, எவ்வளவு பலம் வாய்ந்தவராக இருந்தாலும் திமுக அரசு விடாது என அமைச்சர் ஏ.வே.வேலு கூறியிருந்த நிலையில், சிபிசிஐடி விசாரனையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
"மானியம் அல்லது சிறப்பு விலையில் டீசல் தேவை" - மத்திய பெட்ரோலியத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget