மேலும் அறிய

Tamil Nadu Assembly : எள் என்றால் எண்ணெய்.. அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் 13-ந் தேதிக்கு பிறகு, படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளார்.

 சென்னை, திருவான்மியூரில் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்க்கூடிய கோயி்ல்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“ அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எப்படி பணியாற்றுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட செயல்பாபு என்றுதான் அழைக்க வேண்டும். அந்த பெயருக்கு முழு தகுதிப்படைத்தவராக அவர் விளங்குகிறார்.

சட்டப்பேரவையில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியவும் இல்லை. இன்னும் சட்டசபை கூட்டத்தொடர் முடியவும் இல்லை. 13-ந் தேதிதான் முடிகிறது. சட்டப்பேரவை முடிவதற்குள் ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான்.

எள் என்றால் எண்ணெய் :

எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள் என்போம். ஆனால், சேகர்பாபுவை பொறுத்தவரையில் எள் என்று கூட சொல்லத்தேவையில்லை. அதற்குள் எண்ணெய்யாக வந்து நிற்பார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கின்றனர். அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இந்து சமய அறநிலையத்துறை கொடுத்து வைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அமைச்சராக அவர் இருக்கிறார். கோயில் நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tamil Nadu Assembly : எள் என்றால் எண்ணெய்.. அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

இறைவனைப் போற்றக்கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் அவர் யாரும் செய்யாத  வகையில் 120 அறிவிப்புகளை வெளியிட்டார். அது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. புதிய தேர்கள் வலம் வரவுள்ளன.

அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள்:

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டவுடன், அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகும். அந்த வரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய 12,959 கோயில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.

இதனால், ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். மன்னிக்க வேண்டும். இதை நான் செலவு என்று சொல்லவில்லை. இதன்மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள். ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதி 2 லட்ச ரூபாயாக அதிகரித்து தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக நிறைவேற்றப்படும் :



Tamil Nadu Assembly : எள் என்றால் எண்ணெய்.. அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

சட்டப்ரேவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13ம் தேதிக்கு பிறகு படிப்படியாக நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளோம். வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. அதனை நானே மாதந்தோறும் கண்காணிக்கவிருக்கிறேன். ஒவ்வொரு திட்டத்திற்கும் முன்னுரிமை தந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபட உள்ளேன். அனைத்து துறைகளையும் முந்திவிட்டு செயல்பாடு தன் துறை திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கிவிட்டார்.”

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget