![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Assembly: வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
நிலுவையில் உள்ள வரியை வசூளிக்க சமாதான திட்டம் அறிமுகம் என சட்டப்பேரவையி 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![TN Assembly: வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.. Tamil Nadu Chief Minister Stalin has announced the introduction of peace plan to collect the outstanding tax TN Assembly: வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/9cbac3a00537b6c9b24eea494ea7db6c1696917205532589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நிலுவையில் உள்ள வரியை வசூளிக்க சமாதான திட்டம் அறிமுகம் என சட்டப்பேரவையி 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 25,000 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள வணிகர், வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வணிகவரித்துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல் முறையீடு குறித்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இந்த அரசின் முயற்சியாக புதிய வரி நிலுவைத் தொகை சமாதான திட்டம் பற்றிய அறிக்கையை 110 விதியின் கீழ் அறிவிக்க உள்ளேன். தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்மந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 1,42,569 இவற்றில் நிலுவையாக உள்ள தொகை ரூ. 25,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிக வரித்துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நமது வணிகர்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவு நிலுவையில் உள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தமிழ்நாடு வணிகவரிச் சட்டம் மற்றும் மதிப்பிக்கூட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ளது. மேற்கூறிய இரு சட்டங்களும் இதர சட்டங்களும் கடந்த 1/7/2013 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, வட்டி, அபராதம் என பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் உள்ளது.
கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஒரு சமாதான திட்டத்தை இந்த அரசு அறிமுகம் செய்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவை தொகை குறித்து பல சமாதான திட்டம் செயல்படுத்தி இருந்தாலும் புதிய அனுகுமுறை மற்றும் கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கீழ் வரியாண்டில் 50 ஆயிரத்திற்கும் கீழ் வரி நிலுவையில் இருப்போருக்கு அதாவது வரி, வட்டி, அபராத தொகை செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த நிலுவை தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். தமிழ்நாட்டில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 95,502 சிறு வணிகர்கள் தனது நிலுவை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள். பிற வணிகர்கள் 4 வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இந்த வரம்புகளின் கீழ் உள்ள விதிகளின் படி குறிப்பிட்ட தொகையை செலுத்தினார் வரி நிலுவை வழக்கிலிருந்து வெளி வரலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
TNPSC Group 4 Exam: குரூப் 4 தேர்வு இறுதி விடைத்தாளை உடனே வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்தரவு
‘இரவு, காடு, ரெய்டு’ பிடிபட்ட கள்ள சாராயம்.. திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)