மேலும் அறிய

ஹேப்பி நியூஸ்! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன உபகரணம்.. சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "21.06.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் 2024 2025-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் இன்னபிறவற்றுடன் கீழ்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்:

"அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்"

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், தனது கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் பிறருடைய உதவியின்றி எளிதாக நடமாடுவதற்குத் தேவையான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது என்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட உடலின் பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்கு ஏதுவாக, பயனாளிகளுக்கு நவீன இயன்முறை சிகிச்சை உபகரணத்தை ஒரு உபகரணத்தின் விலை ரூ.10,000/- என்ற மதிப்பில் 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்திற்காக ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு:

மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்லவும் பள்ளி / மருத்துவமனை சென்று வரவும், வேறொருவர் துணையின்றி தன்னிம்பிக்கையுடன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக பல்வேறு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அரசால் விலையில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு খ.10,000/- மதிப்புடைய நவீன இயன்முறை உபகரணங்கள் (Standing Frame) வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றிட ரூ.1,00,00,000/- (ரூ.10,000X1,000) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.

மேலே பத்தி 3-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் பின்வரும் மேலே பத்தி 3-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப் துணைப்பணி" குறித்த செலவினமாகும். இதற்கு சட்ட மன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.-1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும் அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பதை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(ச.ந/வ.செ.பொது-I) துறைக்கு அனுப்பிவைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்
ஆடி பிறப்பு: திருப்புவனம் சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்.. விவசாயிகள் ஆர்வம் ஏன்?
ஆடி பிறப்பு: திருப்புவனம் சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்.. விவசாயிகள் ஆர்வம் ஏன்?

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
Embed widget