மேலும் அறிய

ஹேப்பி நியூஸ்! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன உபகரணம்.. சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "21.06.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் 2024 2025-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் இன்னபிறவற்றுடன் கீழ்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்:

"அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்"

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், தனது கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் பிறருடைய உதவியின்றி எளிதாக நடமாடுவதற்குத் தேவையான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது என்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட உடலின் பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்கு ஏதுவாக, பயனாளிகளுக்கு நவீன இயன்முறை சிகிச்சை உபகரணத்தை ஒரு உபகரணத்தின் விலை ரூ.10,000/- என்ற மதிப்பில் 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்திற்காக ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு:

மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்லவும் பள்ளி / மருத்துவமனை சென்று வரவும், வேறொருவர் துணையின்றி தன்னிம்பிக்கையுடன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக பல்வேறு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அரசால் விலையில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு খ.10,000/- மதிப்புடைய நவீன இயன்முறை உபகரணங்கள் (Standing Frame) வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றிட ரூ.1,00,00,000/- (ரூ.10,000X1,000) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.

மேலே பத்தி 3-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் பின்வரும் மேலே பத்தி 3-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப் துணைப்பணி" குறித்த செலவினமாகும். இதற்கு சட்ட மன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.-1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும் அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பதை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(ச.ந/வ.செ.பொது-I) துறைக்கு அனுப்பிவைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
Tamilnadu Round Up: உயர்ந்த தங்கம் விலை, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள், திருப்பூரில் படுகொலை - தமிழ்நாட்டில் இதுவரை
உயர்ந்த தங்கம் விலை, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள், திருப்பூரில் படுகொலை - தமிழ்நாட்டில் இதுவரை
ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!
ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget