மேலும் அறிய

OBC reservation: தேசியப் பல்கலைக்கழகங்கள் சமூக நீதியை சூறையாடுவதா; ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இடமில்லையா?- அன்புமணி கேள்வி

அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% அல்லது உள்ளூர் அளவிலான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% அல்லது உள்ளூர் அளவிலான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

’’இந்தியா முழுவதும் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 08.08.2022 முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு  தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன; மீதமுள்ள இடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு, சொந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஓபிசி இடஒதுக்கீடு குறித்த விவரங்களை பரிசீலனைக்காக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஓபிசி இட ஒதுக்கீடு

23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களில் மட்டும்தான், 27 விழுக்காட்டைவிடக் கூடுதலாகவோ, குறைவாகவோ ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில்தான், அகில இந்திய தொகுப்பில் 50 விழுக்காடு  இடங்கள் ஓபிசிக்கு ஒதுக்கப்படுகின்றன.


OBC reservation: தேசியப் பல்கலைக்கழகங்கள் சமூக நீதியை சூறையாடுவதா; ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இடமில்லையா?- அன்புமணி கேள்வி

1. குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், காந்தி நகர்,
2. தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், ராஞ்சி, ஜார்க்கண்ட்,
3. டாக்டர். அம்பேத்கர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சோனிப்பேட், ஹரியானா
ஆகிய 3 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

1. ஹிதாயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் - 12.90%
2. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், போபால், மத்தியப் பிரதேசம் - 14%
3. இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர், கர்நாடகம் - 16.20%
4. தேசிய சட்டக் கல்வி & ஆராய்ச்சிக் கழகம், ஹைதராபாத், தெலுங்கானா - 18%
5. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி - 22%

ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காட்டுக்கும் குறைவாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை தவிர மீதமுள்ள 14 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.

சமூக அநீதி

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை இளநிலைப் படிப்புகளில் 15% இடங்களும், முதுநிலை படிப்புகளில் 50% இடங்களும்தான் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 50%க்கும் கூடுதலான  இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான அந்த இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சமூக அநீதி போக்கப்பட வேண்டும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மாநிலச் சட்டங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதும்,  இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதும்  சம்பந்தப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தின் செயற்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்படி தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் சமூக நீதியை சூறையாடுவதை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுமதிக்கக் கூடாது.

சட்ட அமைச்சகம் உறுதி செய்க

சட்டம் மற்றும் நீதித்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதே அரிதாகவும், அதிசயமாகவும் மாறி வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மத்திய சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக மானியக் குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், அதை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அல்லது அதற்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget