சிவகங்கை மக்களே.. ரேஷன் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்: டிசம்பர் 13-ல் உங்கள் வட்டாரத்தில்! குடும்ப அட்டை சேவைகளுக்கு உடனே செல்லுங்கள்!
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் பயன்பெறலாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகின்ற 13.12.2025 அன்று சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
சிவகங்கை மாவட்டம்
வகங்கை மாவட்டம் பொதுவிநியோகத் திட்டத்தில் 2025-ஆம் ஆண்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் டிசம்பர் மாதத்திற்கான மக்கள் வருகின்ற 13.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
முகாமில் நடைபெறவுள்ள சேவைகள்
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.





















