மேலும் அறிய

Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு

சிவகங்கையில், காவல்துறையினரின் விசாரணையின்போது, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அஜித்குமார் என் காவலாளி, விசாரணையின்போதே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், அந்த வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளத.

விசாரணையின்போது உயிரிழந்த காவலாளி அஜித்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், அஜித்குமார் என்ற இளைஞர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு கூறி, காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் நிகிதா புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்குமார் உடலில் 18 வெளிப்புற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளது

காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், அவரை கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரேத பரிசோதனை முடிவுகளின் முதற்கட்ட தகவலில், அஜித்குமார் உடலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த காயங்கள், மண்டை ஓடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் இருந்துள்ளது. உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற, மரணத்துக்கே காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. சங்குப்பகுதியில்  ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவருவதாக கூறப்படுகிறது. மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பலமணி நேரம் நடந்த உடற்கூறாய்வு

வழக்கமாக, பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே நடக்கும். ஆனால், அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இது அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. இந்த வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள், அஜித்குமார் விசாரணையின் போது போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்ற புகாரை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இறந்த நபர் தீவிரவாதியா.? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா.? சாதாரண வழக்கில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்.? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு

அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சரையும் கேள்விக் கணைகளால் துளைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget