![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Seeman : "இசுலாமிய பிரதிநிதிகளை நிற்கவைத்தே பேசி அனுப்பியதுதான் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா?”...சீமான் சரமாரி கேள்வி...!
இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
![Seeman : Seeman tweet Is it social justice that the DMK did not do by talking to the Muslim representatives sending them to stand Seeman :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/69a6453c501ace44f649426f02a61ced1688370042094572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?
இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது? இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாயாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சம்மாக உட்கார வைக்ககூட மனமில்லையா?
சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா?
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 3, 2023
இதுதான் ஐம்பதாண்டுகளாக
தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா?
இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?https://t.co/O7zYROYfgq pic.twitter.com/QZI2KgZQRs
கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு. மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க
Tomato Price Hike: நல்ல சேதி.. நாளை முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் - தமிழக அரசு அறிவிப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)