மேலும் அறிய

Seeman : வளசரவாக்கத்தில் ஆஜரான சீமான்… காவல் நிலையத்தை சுற்றி வளைத்த தொண்டர்கள்..போலீசாருடன் தள்ளுமுள்ளு

நடிகை விஜய்லட்சுமி சீமான் மீது அளித்தப் புகாரின் பேரின் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்

 நடிகை விஜயலட்சுமி  அளித்தப் புகாரின் பேரில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் ஆஜரானார். அப்போது காவல் நிலையத்தை சுற்றி கூடியிருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தள்ளுமுள்ளும் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சீமான் - விஜயலட்சுமி பிரச்சினை 

 தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின் சீமான் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டுச் சென்ற விஜயலட்சுமி கடந்த மாதம் மீண்டும் சீமானை விசாரணை செய்யும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பெயரில் வளசரவாக்கம் போலீஸ் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது.  

இதையடுத்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி திடீர் ஆதவரளித்தார். 

இப்படியாக பிரச்சினை சென்று கொண்டிருந்த நிலையில் வீரலட்சுமி சீமானை விமர்சித்த வீடியோ ஒன்றை வெளியானது. இதனைத்  தொடர்ந்து  நடிகை விஜயலட்சுமி சீமான் பற்றி பேசிய வீரலட்சுமியின் நோக்கத்தை விமர்சித்தார். பின் செப்டம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில் தனது வக்கீலுடன் சென்று சீமான் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி தெரிவிக்கையில், “ நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமானை யாரும் எதுவும் செய்யமுடியாது. அவர் பலம் வாய்ந்தவராக இருப்பதால், காவல்துறை சீமான் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை. அவரை எதிர்கொள்ள எவரும் முன்வரவில்லை, எனக்கு போதிய ஆதரவும் யாரிடமிருந்து கிடைக்கவில்லை.

மேலும் தனக்கு தனக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமியும் தற்போது வேறு மாதிரி நடந்துகொள்கிறார். எனக்கு உதவி செய்வதாக கூறி பலர் என்னை தங்களது அரசியல் லாபத்திற்காக பயண்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சனையால் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் இதனால் இந்த வழக்கை திரும்பப் பெறுகிறேன்  “ என்று கூறினார்.

காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்

நடிகை விஜயலட்சுமி மீதான புகாரின் அடிப்படையில் சீமான் விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல்துறையினர் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இப்படியான நிலையில் இந்த முறை இந்த பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் பொருட்டு தானாக முன்வந்து  விஜயலட்சுமி  அளித்தப் புகாரை வாபஸ் பெற்ற நிலையில்  இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். அப்போது காவல் நிலையத்தை சுற்றி கூடியிருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தள்ளுமுள்ளும் நடைபெற்றது. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்க காவல் நிலையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க : Priya Anand: ‘லியோவுக்கு பிறகு எகிறப்போகும் சம்பளம்’ - நடிகை பிரியா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?

PM Modi: ‘டீ விற்ற நான் எம்.பி.,யானது தான் ஜனநாயகத்தின் சக்தி’ .. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget