மேலும் அறிய

Covid 19 Spike in Tamilnadu: தினசரி பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒருவார கால விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை முதல்வர் நாளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

கொரோனா தினசரி பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  மாநில சுகாதாரத்துறை செயலாளர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒருவார கால விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை முதல்வர் நாளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிகரிக்கும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை: 

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 70 நாட்களுக்குப் பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட தினசரி பாதிப்பு எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாட்களை விட அதிகரித்து காணப்படுகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் சென்னை, ஈரோடு,தஞ்சாவூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், சென்னையின் தொற்று உறுதி விகிதம் 0.7 ஆக உள்ளது. தினசரி பரிசோதனை சராசரியாக 24,000க்கும் குறையாமல் உள்ளது. 

ஜூலை 29 181
ஜூலை 28 164
ஜூலை 27 139 
ஜூலை 26 122 
ஜூலை 25 126 
ஜூலை 24 127 
ஜூலை 23 130 
ஜூலை 22 133 
ஜூலை 21 138 
ஜூலை 20 141 
ஜூலை 19 147  

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்போது அதிக தினசரி பாதிப்புகளை பதிவு செய்யும் இரண்டாவது மாவட்டமாக சென்னை உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில், கோயம்பத்தூர் முதலிடத்திலும், ஈரோடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடந்கியுள்ளது. 

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 1.54 லட்சம் பேர் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பில் இது 37.1% ஆகும். கடந்த 7 நாட்களில் இந்த எண்ணிக்கை 1.41% வளர்ச்சியடைந்துள்ளது. சராசரி தினசரி பாதிப்புகள் இந்த மாநிலத்தில் 17,443 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் 12.93% ஆகவும், வாராந்திர விழுக்காடு 11.97% ஆகவும் உயர்ந்துள்ளது. 6 மாவட்டங்களில் வாராந்திர நோய்த்தொற்று உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது.

கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட 17 நாட்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐக் கடந்தது. குறிப்பாக, கேரளா எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

Covid 19 Spike in Tamilnadu: தினசரி பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஜூலை 7ம் தேதிக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த நான்கு வாரங்களாக, நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர்               

மேலும் வாசிக்க: 

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்' 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Embed widget